News October 12, 2025
அதிமுகவில் போர்க்கொடி தூக்கும் மாஜிக்கள்?

செங்கோட்டையன் போட்ட வெடி நமத்து போய்விட்டது என இப்போதுதான் பெருமூச்சுவிட்டார் EPS. அதற்குள், மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாஜிக்கள் அவரை குடைய ஆரம்பித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், தாங்கள் கைகாட்டும் நபர்களுக்கே சீட் வழங்கணும் என அவர்கள் கூறுகிறார்களாம். ஆனால், அது தன்னுடைய முடிவு என்பதில் EPS தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.
Similar News
News December 16, 2025
கோத்தகிரியில் அதிரடி கைது!

கீழ் கோத்தகிரி கெங்கரை மந்தட்டி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(48). இவருக்கு 17 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஷீலா(45) என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா தனது 2வது மகனுடன் வாழ்ந்து வந்த நிலையில், சத்திரசேகர் தனது மனைவியை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கிடைத்த புகாரின் பேரில் அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
News December 16, 2025
இன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்!

தளபதி கச்சேரி பாடலுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்றி விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2-வது பாடல் ரிலீஸ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 நாள்களில் இசை வெளியீடு விழா, டிரெய்லர் ரிலீஸ், படக்குழுவினரின் நேர்காணல் என அடுத்தடுத்து அப்டேட் வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.


