News April 30, 2024
மணிப்பூர் சம்பவத்தில் போலீசார் உடந்தை

மணிப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்திற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ஜீப்பில் ஓடி ஒளிந்ததாகவும், காவலர்கள் அந்த ஜீப்பை ஓட்டிச் சென்று கலவர கும்பல் அருகே நிறுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 15, 2025
தமிழக மேலவை கலைக்கப்பட்ட வரலாறு தெரியுமா?

65 ஆண்டுகள் தமிழக சட்டப்பேரவையில் இருந்த மேலவை கலைக்கப்பட்டதற்கும், மீண்டும் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு கைவிடப்பட்டதற்கும் திராவிட கட்சிகளின் அரசியல் பின்னணி உள்ளது. அது என்ன மேலவை? இதன் அதிகாரங்கள், பணிகள் என்னென்ன? தமிழகத்தில் ஏன் மேலவை கலைக்கப்பட்டது? கருணாநிதிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்னவென்பதை மேலே போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அதை swipe செய்து பாருங்கள். ஷேர் பண்ணுங்க.
News November 15, 2025
BREAKING: கொந்தளித்தார் விஜய்

மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைப்பதில்லை என்று விஜய் கொந்தளித்துள்ளார். இதுதொடர்பாக ECI-க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான தவெகவை அழைக்காமலேயே ஆலோசனை கூட்டங்களை நடத்துவது ஜனநாயகம் ஆகாது. எனவே, இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களுக்கு தவெகவை அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
News November 15, 2025
ஜம்மு காஷ்மீர் வெடிவிபத்து தற்செயலானது: DGP விளக்கம்

J&K நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்து தற்செயலாக நடந்தது என அம்மாநில டிஜிபி நலின் பிரபாத் தெரிவித்துள்ளார். ஃபரீதாபாத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்களின் மாதிரிகளை தடயவியல் குழுவினர் ஆய்வு செய்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக அவர் கூறினார். இதில், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


