News April 1, 2025
PF ஆட்டோ செட்டில்மென்ட் ரூ.5 லட்சமாக உயருகிறது

மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதலுக்காக PF பணத்தை ஆட்டோ செட்டில்மென்ட் மூலம் எடுக்க அனுமதி தரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. இந்தத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்த இபிஎப் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதையடுத்து மத்திய குழுவின் அனுமதி கிடைத்ததும் இது அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News November 19, 2025
டெல்லி குண்டு வெடிப்பு: துருக்கி நிறுவனத்தில் ரெய்டு

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் துருக்கி நிறுவனங்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அதனால், உ.பி.யில் உள்ள இஸ்தான்புல் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடட் எனும் அச்சகத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இன்று சோதனை செய்தனர். இந்தியாவுக்கு எதிரான வெறுப்பு பிரசுரங்கள் இங்கு அச்சடிக்கப்பட்டதாக தெரிகிறது. அங்கிருந்து CCTV வீடியோக்கள், முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
News November 19, 2025
காட்டாட்சி முடிவுக்கு வரும்: நயினார் நாகேந்திரன்

<<18327587>>ராமேஸ்வரத்தில்<<>> பள்ளி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடில்லை என்று விமர்சித்துள்ள அவர், பெண்களுக்கெதிரான ஆட்சி இனி தமிழகத்தில் தொடரக்கூடாது என்று கூறியுள்ளார். 2026-ல் திமுகவின் காட்டாட்சி முடிவுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 19, 2025
பொய் சொல்லும் CM ஸ்டாலின்: அன்புமணி

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக அரசு பொய் கூறுவதாக அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். 5 ஆண்டுகளில் 5% முதலீடுகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக கூறிய அவர், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பயந்து ஓடுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பொய்யை தவிர CM-க்கு வேற எதுவும் தெரியவில்லை என்றும் போதிய முதலீடுகள் இல்லாததால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் எனவும் சாடினார்.


