News January 12, 2025
அனைத்து தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம்

543 மக்களவைத் தொகுதிகளிலும் பாஸ்போர்ட் சேவை மையம் திறக்கப்படும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்த வெளியுறவு அமைச்சகம், தபால் துறை இணைந்து திட்டம் வகுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. ஆனால் மண்டல அளவிலேயே ஆவண சரிபார்ப்பு மையம் இருப்பதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 5, 2025
80% குணமாகும் கேன்சர் தடுப்பூசி இலவசம்!

கேன்சருக்கான தடுப்பூசியை மேம்படுத்தி வருவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கேன்சர் செல்களை கண்டறிந்து தேடி கொல்லும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்திக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தடுப்பூசி மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. பரிசோதனையில் 75-80% வரை கேன்சர் குணமாவதாகவும், விரைவில் நாடு முழுக்க பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
News August 5, 2025
மோடி ஆட்சியில் 17 கோடி வேலைவாய்ப்பு: அமைச்சர்

கடந்த 10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். கடந்த 16 மாதங்களில் மட்டும் 11 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முந்தைய UPA ஆட்சிகாலத்தில் வெறும் 3 கோடி வேலைவாய்ப்புகள் மட்டும் தான் உருவாக்கப்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News August 5, 2025
கிங்டம் படத்தை திரையிட்டால் முற்றுகை: சீமான்

‘கிங்டம்’ படத்தில் ஈழத்தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒடுக்கினார்களென காட்டுவது வரலாற்றுத்திரிபு என சீமான் சாடியுள்ளார். கருத்துச்சுதந்திரம் எனும் பெயரில் எப்படி வேண்டுமானாலும் திரித்து தவறாகச் சித்தரிக்கலாம் என எண்ணுவதை அனுமதிக்க முடியாது என்றார். ஆகவே ‘கிங்டம்’ படத்தை தமிழகத்தில் திரையிடுவதை நிறுத்த வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என எச்சரித்துள்ளார்.