News April 11, 2025

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News July 9, 2025

1.10 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு காத்திருப்பு!

image

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி புதிய ரேஷன் கார்டை அரசு விரைவாக வழங்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியிலிருந்து மீண்டும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பல முறை ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுவதால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில் சுமார் 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?

News July 9, 2025

பிற்பகல் 12 மணி வரை… முக்கிய செய்திகள்!

image

➤நாடு தழுவிய <<17000804>>ஸ்ட்ரைக்<<>>.. தமிழகத்தில் 80% அரசு பஸ் இயக்கம்
➤ <<17003074>>நமீபியாவில் <<>>சுற்றுப்பயணம்: மேள தாளம் வாசித்த PM மோடி
➤<<17001915>>குஜராத்தில் <<>>உடைந்து விழுந்த பாலம்… 6 பேர் மரணம்
➤<<17001872>>தங்கம் <<>>விலை சவரனுக்கு ₹480 குறைந்தது
➤<<17000262>>ஊக்கமருந்து <<>>பயன்பாடு: Ex. உலகசாம்பியனுக்கு ஒரு வருடம் தடை ➤<<17001168>>சட்டவிரோத <<>>பணப்பரிமாற்றம்.. நடிகை அருணா வீட்டில் ED ரெய்டு

News July 9, 2025

ராஜூவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் சமந்தா!

image

சில காலமாகவே சமந்தா இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் பழகி வருவதாக கூறப்படுகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்க சென்ற சமந்தா, நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட போட்டோக்களில் ராஜை இறுக்கமாக பிடித்தபடி, சமந்தா இருக்கும் போட்டோ தான் நெட்டிசன்களின் கவனத்தை அதிகளவு ஈர்த்துள்ளது. ஒருவேளை வெளிவரும் செய்திகளில் உண்மை இருக்குமோ என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர்.

error: Content is protected !!