News April 11, 2025
பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News August 11, 2025
ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் CM ஸ்டாலின்

முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு CM ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இம்மாத இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்த பயணத்தை அவர் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களை சந்திப்பதுடன் தொழில் நிறுவனங்களின் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
News August 11, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. தமிழ் எப்போது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
2. சூரியனில் எந்த வாயு அதிகமாக உள்ளது?
3. இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
4. மனித உடலில் எந்த உறுப்பு, வெப்பநிலை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது?
5. உங்களுக்கு சொந்தமானது, ஆனால் பிறர் அதிகமாக பயன்படுத்துவார்கள்.. அது என்ன? பதில்கள் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
News August 11, 2025
கமலை விட அதிகமாக கெட்டப் போடும் லோகி!

லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால், அவரையே மிஞ்சும் அளவிற்கு நிஜ வாழ்வில் பல கெட்டப்பை போட்டு வருகிறார். ‘கூலி’ பட நிகழ்ச்சியில் நீண்ட முடி, தாடியுடன் காணப்பட்ட அவர், தற்போது தனது மீசையை ஷேவ் செய்து விட்டார். இந்த கெட்டப்பில் அவரை பார்த்த நெட்டிசன்கள், இது முகமது லோகி என கமெண்ட் செய்து வருகின்றனர். லோகேஷ் விரைவில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.