News April 11, 2025

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News September 16, 2025

காலையில் கடுகு காபி குடிங்க.. அவ்வளோ நல்லது!

image

கடுகு காபி செரிமானத்தையும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் *கடுகு எடுத்து மிதமான தீயில், நன்கு வெடித்து வாசம் வரை வறுக்கவும் *அதை மிக்ஸியில் போட்டு, காபி பொடியை போல நன்றாக அரைத்துக் கொள்ளவும் *இந்த கடுகு பொடியை, கொதிக்க வைத்த நீரில் சேர்க்கவும். மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும் *அதில் வெல்லம் சேர்த்தால், கடுகு காபி ரெடி. SHARE.

News September 16, 2025

திமுகவில் இணைந்த தவெகவினர்

image

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தவெகவை சேர்ந்த பலர் திமுகவில் இணைந்துள்ளதாக திமுக MLA நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஓரணியில் தமிழ்நாடு’ நிர்ணயித்த இலக்கை விட 58 ஆயிரம் உறுப்பினர்களை அதிகமாக திமுகவில் இணைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

News September 16, 2025

₹100 கோடிக்கு தள்ளாடும் ‘மதராஸி’!

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ படம், இதுவரை ₹91 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸான 2 நாளிலேயே ₹50 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 10 நாள்கள் கடந்தும் இன்னும் ₹100 கோடியை தொட முடியாமல் தள்ளாடி வருவதாக கூறப்படுகிறது. ₹150 கோடி பட்ஜெட்டில் படம் உருவானதாக கூறப்படும் நிலையில், தியேட்டர் ரிலீஸ் பெரிதாக லாபத்தை கொடுக்காது என்கின்றனர்.

error: Content is protected !!