News April 11, 2025
பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 21, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேர்வு செய்யப்படும் குடும்பத் தலைவிகளுக்கு, செல்போன் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். டிச.15-ல் அவர்களது வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும். குறுஞ்செய்தி வராதவர்களுக்கு பணம் கிடைக்காது. அரசு அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.
News November 21, 2025
விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு.. இதுதான் காரணம்

சேலத்தில் <<18340402>>விஜய்யின் பிரசாரத்திற்கு<<>> அனுமதி மறுத்தது குறித்து மாவட்ட போலீஸ் விளக்கமளித்துள்ளது. பிரசார நிகழ்ச்சியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற விவரம் அனுமதி கடிதத்தில் இல்லை என்றும், அடுத்த முறை 4 வாரங்களுக்கு முன்பாகவே அனுமதி கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் கடிதம் வழங்கினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று போலீஸ் கூறியுள்ளது.
News November 21, 2025
SA tour of India: தெ.ஆப்பிரிக்க ODI, T20 Squad அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தெ.ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட், 3 ODI, 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் தெ.ஆப்பிரிக்கா வென்ற நிலையில், 2-வது டெஸ்ட் நாளை கவுஹாத்தியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ODI & T20 போட்டிகளுக்கான அணியினை தெ.ஆப்பிரிக்கா அறிவித்துள்ளது. ODI போட்டிகளை டெம்பா பவுமா தலைமையிலும், T20 போட்டிகளை எய்டன் மார்க்ரம் தலைமையிலும் விளையாடவுள்ளது.


