News April 11, 2025
பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 19, 2025
மீண்டும் தலைமை பொறுப்பில் ஜெஃப் பெசோஸ்

Project Prometheus என்ற புதிய AI நிறுவனத்தின் இணை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் பொறுப்பேற்றுள்ளார். 6.2 பில்லியன் டாலர் நிதியில் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், ரோபாட்டிக்ஸ் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கான AI தொழில்நுட்பத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது தனது Blue origin நிறுவனத்தின் விண்வெளி ஆய்வுகளுக்கு உதவும் என்று ஜெஃப் பெசோஸ் நம்புவதாகவும் கூறப்படுகிறது.
News November 19, 2025
இதெல்லாம் நாங்க அப்பவே பண்ணிட்டோம்..!

ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கிறது. ஆனால், அண்மையில் வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவில் கிராபிக்ஸ் நன்றாக இல்லை என SM-ல் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கிராபிக்ஸ் காளையில் மகேஷ் பாபு வரும் காட்சியை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், இதெல்லாம் கமல் 1997-ல் (மருதநாயகம்) ஒரிஜினலாகவே செய்துவிட்டதாக குறிப்பிடுகின்றனர். உங்களுக்கு ‘வாரணாசி’ கிளிம்ப்ஸ் பிடிச்சிருந்ததா?
News November 19, 2025
தேர்தல் வெற்றிக்கு ₹40,000 கோடி செலவா?

பிஹாரில் NDA கூட்டணி மீதான பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டுகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் முதல் தேர்தல் அறிவிப்பு வரை சுமார் ₹40,000 கோடிக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், உலக வங்கி உதவியுடன் ₹14,000 கோடி அளவுக்கு திட்டங்களுக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தேர்தலுக்கு ஒருநாள் முன்புவரை கூட பெண்களின் வங்கிக் கணக்கில் ₹10,000 செலுத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார்.


