News April 11, 2025
பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
Similar News
News November 22, 2025
இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள்: எந்த ஹீரோயினுக்கு தெரியுமா?

இந்த தலைமுறை ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம். நட்சத்திர நடிகையாக இருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்களே ரிலீஸ் ஆகும். அப்படியிருக்க இந்த ஆண்டில் 7-வது படத்தின் ரிலீஸுக்கு காத்திருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன். டிராகன், பைசன், தி பெட் டிடெக்டிவ், ஜானகி, கிஷ்கிந்தாபுரி, பரதா என 6 படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் வெளிவந்துள்ள நிலையில், 7-வது படமான ‘லாக் டவுன்’ டிச.5-ல் வெளியாகிறது.
News November 22, 2025
இந்துக்கள் இல்லையென்றால் உலகம் இல்லை: RSS தலைவர்

இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும் என RSS தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். உலகில் தோன்றிய கிரீஸ், எகிப்து, ரோமன் என எல்லா நாகரீகங்களும் அழிந்துவிட்டன எனவும், ஆனால் பாரதம் என்பது அழிவே இல்லாத நாகரீகம் என அவர் கூறியுள்ளார். மேலும், எவ்வளவு கடினமான சூழல் வந்தாலும் இந்தியா ஒற்றுமையாக, உறுதியாக நின்றிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
குறுக்கே நிற்கும் PAK.. இந்தியா – ஆப்கன் எடுத்த முடிவு

இந்தியாவும், ஆப்கனும் வர்த்தகத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளன. ஆனால், போர் பதற்றம் காரணமாக பாகிஸ்தான் அடிக்கடி சாலைகளை மூடுவதால், கடல் மற்றும் வான்வழியாக வர்த்தகத்தை தொடர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரானின் சபாஹர் துறைமுகம் வழியாகவும், டெல்லி, அமிர்தரஸிலிருந்து காபூலுக்கு 2 சிறப்பு சரக்கு விமானங்கள் மூலமும் வர்த்தகம் செய்ய உள்ளதாக இருநாடுகளும் அறிவித்துள்ளன.


