News April 11, 2025

பங்குனி உத்திரம்: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

பங்குனி உத்திரத்தையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கிலோ ₹400-க்கு விற்பனையான மல்லி இன்று ₹600-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஐஸ் மல்லி – ₹400, முல்லை – ₹750, ஜாதிமல்லி- ₹750, பன்னீர் ரோஜா- ₹120, சாமந்தி – ₹180, அரளிப் பூ – ₹350-க்கு விற்பனையாகிறது. அதேபோல், குமரியின் தோவாளை சந்தையிலும் பூக்கள் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

Similar News

News October 17, 2025

148 ஆண்டுகால கிரிக்கெட் சாதனையின் விளிம்பில்..

image

7 மாதங்கள் பிறகு, கோலி இன்னும் இரு தினங்களில் ப்ளூ ஜெர்சியில் விளையாடவுள்ளார். 148 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் நிகழாத சாதனையின் விளிம்பில் கோலி உள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் மட்டும் அடித்தால், ஒரு பார்மெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். சச்சின் டெஸ்டில் 51 சதங்களும், கோலி ODI-ல் 51 சதங்களும் அடித்துள்ளனர். இந்த உலக சாதனையை கிங் கோலி படைப்பாரா?

News October 17, 2025

உருட்டு கடை அல்வாவுக்கு அமைச்சர் பதிலடி

image

திமுகவின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அச்சிட்டு, ‘உருட்டு கடை அல்வா’ என்ற பெயரில் EPS விநியோகித்தது அரசியல் கவனம் பெற்றுள்ளது. ஆனால், இன்ஸ்டா பாலோவர்ஸ்ஸை அதிகரிப்பதற்கு EPS இவ்வாறு அரசியல் செய்து வருவதாக அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவை திருட்டு கடையாக மாற்றியவர் EPS எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

News October 17, 2025

BREAKING: தங்கம் விலை தடாலடியாக மாறியது

image

தங்கம், வெள்ளி, சமையல் எண்ணெய்யின் அடிப்படை இறக்குமதி விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, பாமாயில்(100Kg) இறக்குமதி விலை ₹97,504-ல் இருந்து ₹98,824, கச்சா சோயா எண்ணெய் ₹1,03,928-ல் இருந்து ₹1,04,456 ஆக அதிகரித்துள்ளது. <<18028729>>தங்கம்<<>>(10 கிராம்) ₹1,08,328-ல் இருந்து ₹1,16,766 ஆகவும், வெள்ளி(1Kg) ₹1,33,320-ல் இருந்து ₹1,46,344 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் இவற்றின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

error: Content is protected !!