News October 15, 2025
எடப்பாடி அல்ல ‘பொய்’பாடி பழனிசாமி: அமைச்சர் ரகுபதி

சட்டசபையில் EPS முழுக்க பொய்யை மட்டுமே பேசியதாக அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் என EPS கனவு காண்பதாக விமர்சித்துள்ளார். விஜய்யின் எல்லா கூட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆதாரம் இருப்பதாக கூறிய ரகுபதி, எத்தனை கூட்டணி அமைந்தாலும் திராவிட மாடல் ஆட்சியே மீண்டும் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 15, 2025
இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிப்பு

இந்தியா, ஆஸி., இடையேயான மகளிர் உலகக் கோப்பை லீக் போட்டி, கடந்த அக்.12-ல் நடைபெற்றது. இதில், 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி., வெற்றி பெற்றது. இப்போட்டியில் slow over-rate காரணமாக (பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக) இந்திய அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 5% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கி., நியூசி., வங்கதேசம் அணிகளுடன் மோதவுள்ள இந்தியா, 2-ல் நிச்சயம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
News October 15, 2025
தைராய்டுக்கு தீர்வு கொடுக்கும் மந்தாரை கஷாயம்

தைராய்டு பிரச்னை தீர்க்கும் மந்தாரை கஷாயம் செய்ய, கொத்தமல்லி விதைகளை முதல் நாள் இரவே 300 மில்லி அளவு தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். அடுத்தநாள் காலையில் அதை கொதிக்க விட்டு, மந்தாரை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். அது150 மில்லியாக சுண்டும் வரை கொதிக்க விடுங்கள். சுண்டிய பிறகு வடிகட்டி எடுத்தால் மந்தாரை கஷாயம் ரெடி. இந்த மந்தாரை கஷாயத்தை தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
News October 15, 2025
BREAKING: தீபாவளி போனஸ்.. தமிழக அரசு அறிவித்தது

தீபாவளி பண்டிகையையொட்டி 2024 – 25 ஆம் ஆண்டுக்கான போனஸ், கருணைத்தொகை 175 கோடியே 51 லட்சம் ரூபாய் இன்று(15.10.2025) அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 லட்சத்து 5 ஆயிரத்து 955 பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கை உடனே செக் பண்ணுங்க.