News April 28, 2025

சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

image

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News

News November 26, 2025

இவர்களெல்லாம் சுக்கு மல்லி காபி குடிக்கக்கூடாது

image

சுக்கு, மல்லி, மிளகு, கருப்பட்டி ஆகியவற்றை இடித்து, நன்றாக கொதிக்க வைத்து குடிக்கும் சுக்கு மல்லி காபியால் பல நன்மைகள் இருந்தாலும், அதனை ஒரு சிலர் தொடர்ந்து குடிப்பது நல்லதல்ல. நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப்போக்கு அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 1 (அ) 2 முறை மட்டுமே பருகலாம் என டாக்டர்கள் கூறுகின்றன. மேலும், அறுவை சிகிச்சைகளுக்கு முன்பும் குடிக்கக்கூடாது. Share it.

News November 26, 2025

தமிழகம், கேரளாவுக்கு பட்டை நாமம்: சு.வெங்கடேசன்

image

2024-25-ம் ஆண்டில் புதிய ரயில்வே வழித்தடத்திற்கு ₹31,458 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் தெற்கு ரயில்வேக்கு வெறும் 301 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக MP சு.வெங்கடேசன் சாடியுள்ளார். மொத்த தொகையில் 1%-ஐ மட்டுமே ஒதுக்கிவிட்டு, தமிழகம், கேரளாவுக்கு மத்திய அரசு பட்டை நாமம் போட்டு விட்டதாகவும் விமர்சித்துள்ளார். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 26, 2025

இன்று மதியம் புயல் உருவாகிறது

image

மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று (நவ.26) மதியம் புயலாக தீவிரமடையும் என IMD கணித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி, 24 மணிநேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே, தென் & வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

error: Content is protected !!