News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News November 20, 2025
ஒரு செல்ஃபியில் பல லட்சம் கோடி!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஏற்பாடு செய்த விருந்தில், <<18338177>>ரொனால்டோ<<>> நேற்று கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக எலான் மஸ்க், OpenAI இணை நிறுவனர் கிரெக் புரோக்மேன், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி வைரலாகி வருகிறது. இந்த செல்ஃபியில் உள்ளவர்களின் சொத்து மதிப்பு பல லட்சம் கோடியை தாண்டும்.
News November 20, 2025
BREAKING: விஜய் முக்கிய முடிவு… தொண்டர்கள் மகிழ்ச்சி

கரூர் துயருக்கு பிறகு, மீண்டும் விஜய் பரப்புரையை தொடங்கவுள்ளார். டிச.4-ல் சேலத்தில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு தவெக தரப்பில் SP-யிடம் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த சமயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறவுள்ளதால், அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் தரப்பில் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் தொடங்கவுள்ள பரப்புரை விஜய்யின் அரசியலை தீவிரப்படுத்துமா?
News November 20, 2025
‘மருதநாயகம்’ அப்டேட் கொடுத்த கமல்!

கமல்ஹாசனின் கனவு திரைப்படம் ‘மருதநாயகம்’. அந்த காலகட்டத்திலேயே மிக அதிக பொருள்செலவில் படப்பிடிப்பு தொடங்கி, பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில், அந்த ஆசை தனக்கும் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் காலத்தில் ‘மருதநாயகம்’ சாத்தியப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


