India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முன்னாள் தொடக்க வீரரான வீரேந்திர சேவாக் தனி இடத்தை பிடித்திருந்தார். அவரது ஓய்வுக்குப் பின், சேவாக் போன்ற ஒரு துணிச்சலான தொடக்க ஆட்டக்காரரை அணியால் உருவாக்க முடியவில்லை. ஆனால் SRH பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா அந்த பற்றாக்குறையை ஈடுசெய்வார் என்று நம்பப்படுகிறது. இந்த சீசனில் அவர் விளையாடிய 4 போட்டிகளில், 32 ரன்கள் (19 பந்துகளில்), 63(23), 29(20), 37(12) என அசத்தியுள்ளார்.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். தமிழ்நாட்டில் பிரபல நடிகையும், நடிகர் சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். பெரிய திரையிலும், சின்னத் திரையிலும் வெற்றிகரமாக வலம் வந்த ராதிகா, தனது வெற்றிக்காக விருதுநகர் தொகுதியில் சரத்குமாருடன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான், வேலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். திரைப்படங்களில் வில்லன், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் அசத்திய மன்சூர் அலிகான், தற்போது வேலூர் தொகுதியில் வாக்குசேகரித்து வருகிறார். மீன் கடைகளுக்கு சென்று மீன்களை வெட்டி கொடுத்தல் உள்ளிட்ட நூதன வழிகளில் அவர் வாக்கு கேட்டு வருகிறார்.

கேரளாவில் பிரபல நடிகர் சுரேஷ் கோபி, பாஜக சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கொல்லம் தொகுதியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் நடிகர் முகேஷ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக, பிரபல நடிகர் கிருஷ்ணகுமாரை களமிறக்கியுள்ளது.
இதனால் மக்களவைத் தேர்தலில் கேரளாவில் 3 திரைநட்சத்திரங்கள் போட்டியிடுகின்றனர். அங்கு சட்டப்பேரவைத் தேர்தலில் 4 நடிகர்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

பாஜக சார்பில் இந்தி நடிகைகள் ஹேமா மாலினி மதுராவிலும், கங்கனா ரனாவத் ஹிமாச்சல் பிரதேசத்தின் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா திரிணாமுல் வேட்பாளராக அசான்சோல் தொகுதியில் களமிறங்கியுள்ளார். தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரில் ராமர் கதாபாத்திரத்தில் நடித்த அருண் கோவில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மக்களவைத் தேர்தல் பிரதமர் மோடி மட்டுமின்றி RSS இமேஜையும் தகர்க்கும் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். மக்களின் மத உணர்வை கிளறிவிட்டு, வெறுப்புணர்வை விதைத்து அரசியல் குளிர்காயும் RSS கருத்தியலே பாஜகவின் கொள்கை. ஜனநாயகம் பற்றி அதிகம் பேசும் பாஜகவினர், அதனை நடைமுறையில் பின்பற்றுவதில்லை என தாக்கிய அவர், நிர்வாக சிக்கலை பேசித் தீர்க்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்தார்.

தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படம் ‘ராயன்’. இதில் எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தில் படத்தின் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்.19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், இன்று மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக போட்டியிடுகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அடுத்தடுத்த அறிவிப்பால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர். முன்னதாக, ஏப்.12 வரை பள்ளிக்கு வர வேண்டும். 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதால், ஏப்.15 -19 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக புதிய அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மட்டுமல்ல இந்தியாவே மீட்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களையும் கொண்டதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Sorry, no posts matched your criteria.