India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வட இந்தியாவில் பல Highlight-டான விஷயங்கள் இருந்தாலும், நம்மூர் மக்களுக்கு சட்டென ஞாபகம் வருவது குட்கா கறைதான். அப்படி இந்தியாவில் அதிகளவில் குட்கா எடுத்துக் கொள்ளும் மாநிலங்களின் டாப் 5 பட்டியலை மேலே கொடுத்துள்ளோம். எந்த மாநிலம் டாப்பில் இருக்கிறது என்பதை அறிய போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து பார்க்கவும். குட்காவை ஒழிக்க ஒரு சிம்பிள் ட்ரிக்ஸை சொல்லுங்க?

கரூர் துயரம் நடந்து சுமார் ஒரு மாதமாகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் இன்னும் சந்திக்கவில்லை. அனுமதி கிடைத்ததும் அவர் கரூர் செல்வதாக முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரம் அழைத்து விஜய் ஆறுதல் தெரிவிக்கவுள்ளார். இதனால், தனது முடிவில் இருந்து விஜய் பின்வாங்கி இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தான் ஆறுதல் கூட சொல்வீர்களா எனவும் அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன.

இந்திய அணியின் ஓபனர் Hitman ரோஹித் சர்மா 63 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 2-வது ODI-யிலும் அவர் அரைசதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ODI-யில் இது ரோஹித் சர்மாவுக்கு 60-வது அரைசதமாகும். இந்திய அணி தற்போது வரை 20.1 ஓவர்களில் 119/1 ரன்களை எடுத்துள்ளது.

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக UN பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் கத்தார் நாடுகளுக்கும் பாராட்டு தெரிவித்த நிலையில், இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதியளித்தது.

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28, 29,30 ஆகிய தேதிகளில் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாமகவின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றார். பாமக இளைஞரணி செயலாளராக தமிழ்க்குமரன் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்தார். முன்னதாக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி கட்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் டிரம்ப், அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். சீன அதிபருடன் பேச நிறைய விஷயங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த சந்திப்பின் போது தைவான் பற்றி பேசுவேன் என்றும், இது ஒரு நல்ல சந்திப்பாக நடக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பற்றி கேள்வி கேட்டதே குற்றம் என அமைச்சர் <<18095753>>துரைமுருகன்<<>> நினைப்பது நியாயமா என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். நல்லாட்சி நடக்கும்போது, அதிகாரிகள் இப்படி செய்வது வேதனையாக உள்ளதாக தெரிவித்த அவர், துரைமுருகனின் கருத்து வருத்தமளிப்பதாக கூறினார். நல்ல ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என்பதற்காகவே அமைதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆஸி.,க்கு எதிரான 3-வது ODI-ல் இந்திய கேப்டன் சுப்மன் கில் 24 ரன்களுக்கு அவுட்டானார். 237 ரன்களை துரத்தும் இந்திய அணி, தற்போது 10.2 ஓவர்களில் 69/1 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

*ஒரு நாளுக்கு ₹50,000-க்கு மேல் டெபாசிட் செய்தால் பான் கார்டு விவரம் கட்டாயம்.
*Savings Account-ல் ஆண்டுக்கு ₹10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*Current Account-ல் ஆண்டுக்கு ₹50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கி தரப்பில் IT-க்கு தெரிவிக்கப்படும்.
*இந்த டெபாசிட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லையென்றால் சிக்கல் ஏற்படும். ஷேர் பண்ணுங்க 
Sorry, no posts matched your criteria.