News April 11, 2025

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கமா?

image

திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி நீக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கம் செய்வது குறித்து கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.<<16061152>> பொன்முடியின் பேச்சு<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சைவம், வைணவம், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.

News April 11, 2025

அமித்ஷாவின் மேடையில் 6 சீட்டு யாருக்கு?

image

சென்னையில் முகாமிட்டுள்ள அமித்ஷாவை சுற்றியே இன்று தமிழக அரசியல் களம் சுழல்கிறது. 2026 தேர்தலுக்காக NDA கூட்டணியை இறுதி செய்யவே அமித்ஷா வந்துள்ளார். இந்நிலையில், ADMK, PMK, TMC, AMMK தலைவர்களும் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ள நிலையில், மேடையில் 7 நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 1 அவருக்கு மீதமுள்ள 6 யார் யாருக்கு?

News April 11, 2025

மாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: வருந்திய துரைமுருகன்

image

மாற்றுத்திறனாளிகள் <<16019356>>குறித்த பேச்சுக்கு<<>> அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக துரைமுருகன் மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இந்நிலையில், தனது பேச்சுக்காக துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். பொன்முடியை தொடர்ந்து தனது பதவியும் பறிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.

News April 11, 2025

பொன்முடியும்… சர்ச்சைப் பேச்சுகளும்..!

image

சைவம், வைணவம், பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி, சர்ச்சையாக பேசுவது இது முதல் முறையல்ல. விழுப்புரத்தில் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவில், ஒன்றியக் குழு தலைவரை ‘ஏம்மா.. நீ எஸ்.சி. தானே’ எனக் கேட்டார். அதே போல, மகளிர் பேருந்து திட்டத்தை பற்றி பொதுக்கூட்டத்தில் பேசும் போது, ‘எங்கே வேண்டுமானாலும், ஓசி பஸ்சில் தான போறீங்க’ என கேட்டதும் கடும் சர்ச்சையாகி இருந்தது.

News April 11, 2025

முன்னாள் கிரிக்கெட்டர் ராஜகோபால் காலமானார்!

image

ஆந்திர முன்னாள் ரஞ்சி அணியின் கேப்டன் வெலுகோட்டி ராஜகோபால் யச்சேந்திரா (94) காலமானார். இவர், 1956ல் திருவிதாங்கூர்-கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். ஆல் ரவுண்டரான இவர், பேட்டிங் மற்றும் லெக் ஸ்பின் பவுலிங்கிற்காக பாராட்டப்பட்டவர். 15 ரஞ்சி போட்டிகளில் விளையாடி இருக்கும் யச்சேந்திரா, 1963-65 ஆம் ஆண்டுகளில், ரஞ்சித் தொடரில் ஆந்திர அணியின் கேப்டனாக இருந்துள்ளார். #RIP

News April 11, 2025

பொன்முடியின் பொறுப்புக்கு வந்த திருச்சி சிவா!

image

திமுக துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார். சைவம், வைணவம் குறித்து <<16061152>>பொன்முடி பேசிய<<>> பேச்சு சர்ச்சையான நிலையில், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து அவரை விடுவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து திருச்சி சிவாவை விடுவித்து, துணைப் பொதுச் செயலாளராக நியமிப்பதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News April 11, 2025

ஓடிடியில் இன்று ஒரே நாளில் 18 படங்கள்!

image

ஓடிடியில் திரைப்படம் பார்ப்பவர்களுக்கு இன்று விருந்து காத்திருக்கிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, இங்கிலீஷ் என ஒரே நாளில் 18 படங்கள் ரிலீஸாகின்றன. தெலுங்கு திரைப்படமான கோர்ட், தமிழ் படமான பெருசு, இந்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய சாவா ஆகியவை NETFLIX-ல் வெளியாகியுள்ளன. AMAZON பிரைம், AAHA, SUNNXT ஓடிடி தளங்களிலும் புதியப் படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன.

News April 11, 2025

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான வழக்கு: ஏப்.16ல் விசாரணை

image

வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தாக்கலான மனுக்களை வரும் ஏப்.16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்ஜய் குமார், விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் இம்மனுக்கள் விசாரணைக்கு வருகிறது. அதே போல் மத்திய அரசு தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் சட்டம் தொடர்பாக தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 11, 2025

ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு குடும்பமே பலியான சோகம்!

image

நீங்கள் மேலே பார்க்கும் போட்டோ Siemens நிறுவன சிஇஓ Agustin Escobar-ன் அழகிய குடும்பம். அமெரிக்காவுக்கு இன்பச் சுற்றுலா சென்றவர்களுக்கு அதுவே கடைசி பயணமாக அமைந்துவிட்டது. நேற்று மாலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் ஹட்சன் நதியில் <<16059268>>விழுந்து நொறுங்கியதில்<<>> அகஸ்டின் எஸ்கோபார் அவரது 3 குழந்தைகள், மனைவி, விமானி 6 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். USA அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News April 11, 2025

AI உதவியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை!

image

AI வளர்ச்சி பல துறைகளில் மனிதனை ஓரங்கட்ட தொடங்கி விட்டது. AI உதவியுடன், உலகில் முதல் குழந்தை பிறந்துவிட்டது. மெக்சிகோ நாட்டை சேர்ந்த 40 வயது பெண்ணிற்கு IVF முறையில், ஆண் குழந்தை பிறந்துள்ளது. IVF என்பது, Intracytoplasmic sperm ஊசியின் மூலம், நேராக கருமுட்டையில் விந்தணுவை மனித உதவியுடன் செலுத்தப்படுவதாகும். ஆனால், AI வந்துவிட்டதால், இனி மனித உதவி தேவைப்படாது. இன்னும் என்னலாம் மாறப்போகிறதோ!

error: Content is protected !!