India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிட்டே ஹெக்செத் உடன் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பாக் தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் US எப்போதும் இந்தியாவுக்கு துணை நிற்கும் என ஹெக்செத் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக திமுக MP-க்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மதிப்பீடுகள் குழு உறுப்பினராக தயாநிதி மாறனும், பொதுத்துறைக்கான குழு உறுப்பினராக கனிமொழியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது.
நடப்பு IPL சீசன் தொடக்கத்தில் ரோஹித் சர்மா சற்று தடுமாறி வந்தாலும் பின்னர் பார்முக்கு திரும்பினார். அதன் தொடர்ச்சியாக இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். அத்துடன் மும்பை அணிக்காக 6000 ரன்களை கடந்து புதிய சாதனையையும் ரோஹித் படைத்துள்ளார். ஒரு அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு(8447) அடுத்த இடத்தில் ரோகித் உள்ளார்.
கேது கிரகம், வரும் மே 18-ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைவதால் முன்னேற்றம் காணப் போகும் 3 ராசிக்காரர்கள்: *ரிஷபம்: தடைபட்ட பணிகள் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு *விருச்சிகம்: சாதகமான சூழல் ஏற்படும். வேலை, தொழிலில் முன்னேற்றம். திருமண வரன் தேடி வரும் *தனுசு: பிரச்னைகள் தீரும். தொழில் வளர்ச்சி, நல்ல லாபம் ஏற்படும். பணி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸுடன் மோதும் இன்றைய ஆட்டத்தில் அடிக்கப்படும் ஒவ்வொரு சிக்ஸருக்கும், ஆறு வீடுகளில் சூரிய பேனல் மூலம் மின்சார இணைப்பு கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கு உதவ முடியும், சுற்றுச்சூழல் காக்கவும் உதவலாம். ராஜஸ்தான் ராயல்ஸின் இந்த ‘பிங்க் ப்ராமிஸ்’ பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கல்லீரலில் கொழுப்புத் திசுக்கள் படியும் Fatty Liver பாதிப்பு, தற்போது அதிகரித்து வருகிறது. இதற்கான மருத்துவ சிகிச்சைகள் இருக்கின்றன. எனினும், சில வழிமுறைகள் மூலம் ஆரம்ப நிலையில் அதை கட்டுப்படுத்தலாம்: *காலையில் வெறும் வயிற்றில் 2 ஆப்பிள் சாப்பிடலாம் *காபி குடிக்கலாம் *தினமும் குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி *வறுத்த, பதப்படுத்தப்பட்ட, ஜங்க் மற்றும் ஃபாஸ்ட் புட் உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். ரிக்கல்டன் 29 பந்துகளிலும், ரோஹித் சர்மா 31 பந்துகளிலும் அரைசதம் அடித்து எதிர் அணிக்கு தலைவலியை கொடுத்தனர். இதனால் மும்பை அணி ரன் மளமளவென ஏறியது. இதனால் இன்றைய போட்டியில் ராஜஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
அமெரிக்காவில் ஓடும் ரயிலில் ஆண் பிணத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்ட நபர், கோர்ட்டில் சரண் அடைந்தார். நியூயார்க் ரயிலில் சடலத்துடன் உறவில் ஈடுபட்ட மர்ம நபரை போலீஸ் தேடி வந்தது. இந்நிலையில், அவரே முன்வந்து மன்ஹாட்டன் கோர்ட்டில் சரணடைந்தார். விசாரணையில் அவர் பெயர் பெலிக்ஸ் ரோஜாஸ் (44) என்பதும், பிணத்திடம் இருந்து திருடியதும் தெரிந்தது. அவர் மீது ரேப் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
100 Gm-க்கு குறைவாக சிக்கன் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு (2 முறை) 300 Gm-க்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் என சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக சிக்கன் சாப்பிடுபவர்கள் (பெண்களை விட ஆண்களுக்கு) இரைப்பை குடல் புற்றுநோய்களை உருவாக்கும் அபாயம் 2 மடங்கு உள்ளதாம். பதப்படுத்தப்பட்ட சிக்கன் சாப்பிட்டால், இந்த ஆபத்து இரு மடங்காக அதிகரிக்குமாம்.
Sorry, no posts matched your criteria.