News March 29, 2024

பாஜகவிற்கு எதிராக பதிவிட்ட கிரிக்கெட் வீராங்கனை

image

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் பூஜா வஸ்த்ரகர் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் இருக்கும் அந்த புகைப்படத்தில் ‘வசூலி டைட்டன்ஸ்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. வஸ்த்ரகர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு BCCIயிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அவரது இன்ஸ்ட்டா ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.

News March 29, 2024

தெலுங்கில் ரிலீஸ் ஆகும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’

image

கடந்த மாதம் வெளியான மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ரூ.20 கோடியில் உருவான இப்படம் ரூ.214 கோடி வசூலைக் குவித்து, மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 29, 2024

பிரதமர் மோடியின் செயல் பேராபத்து

image

இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் இந்த ஆண்டு 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நான் கிழித்த கோட்டை தாண்டினால் கைது செய்வேன் என பிரதமர் மோடி மிரட்டுவது விபத்தோ, விபரீதமோ அல்ல. பேராபத்து எனக் கூறிய அவர், சினிமாவில் கூட இதுபோல கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார். ஊழல் வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News March 29, 2024

என்னோட டார்கெட் RCB மட்டும் தான்

image

பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஒவ்வொரு முறையும், அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும் என நினைத்ததாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் கம்பீர் தெரிவித்துள்ளார். RCB அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்றாலும், தனது மனதில் அவர்கள் கோப்பையை வென்றவர்கள்தான் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கோலி, கெயில், ABD போன்றோரைக் கொண்ட வலிமையான அணியாக RCB இருந்ததாகக் கூறினார்.

News March 29, 2024

தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மீண்டும் மனு

image

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று ஓபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

News March 29, 2024

குட்டித்தூக்கம் போடுவதில் இவ்வளவு நன்மைகளா?

image

அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன், லேசாக கண்ணை கட்டும். அப்போது குட்டித்தூக்கம் போடுவது பல நன்மைகளை அளிக்குமாம். குட்டித்தூக்கம் என்பது 10 முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். தேவையற்ற கவலை, பதற்றத்தை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்குமென சமீபத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

அந்த சம்பவத்திற்கும் பள்ளிக்கும் சம்பந்தமில்லை

image

மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

News March 29, 2024

வாழ்க்கையின் முரண்பாடு இதுதானோ?

image

கனடாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்க அணியில் உன்முக்த் சந்த் இடம்பெறவில்லை. அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த U19 இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவர் தனது X பக்கத்தில், ‘நியாயமற்ற அமைப்புகளை பற்றியும், ஆரோக்கியமான மாற்றங்களின் அவசியம் குறித்தும் மக்கள் பேசுவதை கேட்கிறேன். ஆனால் அதே மக்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதே அநீதியான வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்’ என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

நிர்மலா சீதாராமனின் கையில் பணம் இல்லை.. ஆனால்!

image

தேர்தலில் போட்டியிட தனது கையில் பணம் இல்லை என சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துள்ள காங்., எம்எல்ஏ இவிகேஎஸ் இளங்கோவன், ‘அவரது கையில் பணம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பையில், படுக்கை அறையில் பணம் இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவில் சர்வாதிகாரம் உள்ளதாக அமெரிக்கா, ஜெர்மனி கூறுவதை நிர்மலா சீதாராமனின் கணவரே ஆதரிக்கிறார்’ என கூறியுள்ளார்.

News March 29, 2024

கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை

image

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த ராஜேஷ் (30) என்ற இளைஞர் EMI முறையில் செல்ஃபோன், மோட்டர் சைக்கிள் ஆகியவற்றை வாங்கியிருந்ததாக தெரிகிறது. தவணையை சரியாக திருப்பி செலுத்தாதால் கடன் கொடுத்தவர் ராஜேஷின் வீடு தேடி வந்து அவரது தாய் & தந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மூவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

error: Content is protected !!