India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரசுப் பள்ளிகளில் இதுவரை 3.20 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 37,576 அரசுப் பள்ளிகளில் சுமார் 53 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக மார்ச் 1 முதல் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் தொடங்கி வேகமாக நடந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 10 ஆண்டில் 28% சரிந்துள்ளது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்திருக்கிறது. 2013ஆம் ஆண்டில் ரூபாய் மதிப்பு ₹54.59இல் இருந்து ₹60.14ஆக சரிந்தது. இதையடுத்து ₹60.14ல் இருந்து படிப்படியாக சரிந்து ₹83.31ஆக உள்ளது. இது 10 ஆண்டுகளில் 27.8% வீழ்ச்சி அடைந்துள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு 304 பில்லியன் டாலரில் இருந்து 645 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

நாளை ரம்ஜான், பின் சனி, ஞாயிறு வாரவிடுமுறை மற்றும் மாணவர்களுக்கான கோடை விடுமுறை வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இன்று மாலை முதல் 1,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பயணம் மேற்கொள்ள விரும்புவோர், கடைசி நேர சிக்கலை தீர்க்க உடனே www.tnstc.in என்ற இணையதளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம்.

ராஜஸ்தான் – குஜராத் இடையேயான 24ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு ஜெய்பூரில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில், ராஜஸ்தான் அணி மட்டும் தான் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. லக்னோ, டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய 4 அணிகளை வீழ்த்தி, 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்று ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியுடன் மோதவுள்ளதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்கும், ‘சென்னை ஸ்டோரி’ என்ற சர்வதேச படத்தில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமாகி இருந்தார். ‘அரேஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்’ என்ற நாவலின் அடிப்படையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருந்தது. இந்நிலையில், படத்தில் இருந்து திடீரென ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார். முன்னதாக, இப்படத்தில் நடிக்க இருந்த சமந்தாவும், உடல்நலப் பிரச்னை காரணமாக விலகினார்.

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உலகப்புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். இங்குள்ள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் 417 படிக்கட்டுகள் ஏறி கோயிலுக்கு செல்கின்றர். 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் தாயுமானவர் சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரித்தார். தொடர்ந்து, கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர், இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்பு அங்கிருந்து நீலகிரி செல்லும் அவர், அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.

பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை, 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாஜகவுக்கு பிடிக்கவில்லை. மீண்டும் பாஜக வென்றால் அந்த திட்டங்கள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார். மேலும், விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் வென்று விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும் எனவும் கூறினார்.

CEC ராஜீவ் குமாருக்கு காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அவரின் செல் எண்ணுக்கு மிரட்டல் விடுத்து காலிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு குரல் பதிவு அனுப்பியுள்ளது. இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்புக்கு பதிலாக இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால் அவருக்கு 24 மணி நேரமும் சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.

அதிமுகவை தொடங்குவதற்கு ஆணி வேராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் என முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். அரசியல் முடிவுகளை மிக சிறப்பாக எடுக்கக்கூடிய அவர், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்க அவருக்கு பெரிதும் ஊக்கமளித்தார். மேலும், எம்ஜிஆரின் அன்பையும் ஆர்.எம்.வீ முழுமையாக பெற்றிருந்தார் எனக்கூறிய அவர், அதிமுகவுக்கும், திராவிட இயக்கத்துக்கும் அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத துயரம் என்றார்.
Sorry, no posts matched your criteria.