India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

✍நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்துவிட்டால், நமக்குள் இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும். ✍பிரார்த்தனைகளை விட மிகவும் உயர்ந்தது பொறுமை தான். ✍மனநிம்மதிக்கு இரண்டு வழிகள் தான் இருக்கின்றன; ஒன்று விட்டு கொடுப்பது இல்லையெனில் விட்டு விலகுவது. ✍அதிகமாக பேசுவதால் மட்டும் ஒருவன் அறிஞனாகிவிட மாட்டான். ✍உங்கள் மகிழ்ச்சிக்கும் துன்பத்திற்கும் நீங்களே காரணம்.

விஜய்யின் ‘தளபதி69’ ஐ எந்த இயக்குநர் இயக்கவுள்ள யாரென தெரியும்; ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்று The G.O.A.T பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், தளபதி69-ஐ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனக் கூறினார். அரசியலுக்கு செல்லும் விஜய்யின் கடைசியாக நடிக்கவுள்ள படம் என்பதால் தளபதி69 மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக எழுதிக் கொடுத்த பாத்திரத்தில் இபிஎஸ் அருமையாக நடிக்கிறார் என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது அவரது சொந்த முடிவு இல்லை. அது பாஜகவின் உத்தரவு. இப்போது அந்தக் கட்சியின் பி-டீமாக அதிமுக இருக்கிறது. பழனிசாமியின் பகல் வேஷம் மக்களிடம் எடுபடப் போவதில்லை என்றார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்து புறப்படும் விமானங்களில் பயண கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. குறிப்பாக சென்னையிலிருந்து மும்பை செல்ல ₹4,700ஆக இருந்த கட்டணம் ₹7,000 ஆக உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. கொல்கத்தாவுக்கு ₹9,000ஆகவும், கொச்சிக்கு ₹8,000ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஸ்ரீநகருக்கு ₹17,000 ஆகவும், போர்ட் பிளேயருக்கு ₹10,200 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பேட்டிங் செயல்திறனை RCB வீரர்கள் வெளிப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் டூப்ளசி தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், 280 ரன்களை எட்டுவது கடினமானது என்றாலும் இயன்றவரை இலக்கை நெருங்கி செல்ல முயற்சித்தோம். 30-40 ரன்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம். பேட்டிங்கிலும் வேகப்பந்து வீச்சிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது எனக் கூறினார்.

▶ஏப்ரல் – 16 | ▶ சித்திரை – 03
▶கிழமை: செவ்வாய் | ▶திதி: அஷ்டமி
▶நல்ல நேரம்: காலை 07:30 – 08:30 வரை, மாலை 05:15 – 06:00 வரை
▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 07:30 – 08:30 வரை
▶ராகு காலம்: காலை 03:00 – 04:30 வரை
▶எமகண்டம்: காலை 09:00 – 10:30 வரை
▶குளிகை: நண்பகல் 12:00 – 01:30 வரை
▶சந்திராஷ்டமம்: அனுஷம்
▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்

RCB அணிக்கு எதிரான லீக் போட்டியில் வென்ற SRH அணி பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- 1.ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 287 ரன்கள் எடுத்து தனது முந்தைய சாதனையை ஹைதராபாத் அணியே மீண்டும் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது. 2. ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் (22) அடித்தது. 3.அதிவேகமாக 100 ரன்களை எடுத்த போட்டி (டிராவிஸ் 41 பந்துகளில் 102 ரன்களை எடுத்தார்).

சமூகத்தில் பின்தங்கிய மக்களும், ஏழைகளும் முன்னேறுவதை பாஜகவினருக்கு விரும்பவில்லை என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிட்டு, புதிதாக அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவோம் என்று பாஜக தலைவா்கள் பலா் பேசி வருகின்றனார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக முயற்சித்தால், மக்கள் அமைதியாக இருக்க மாட்டர்கள் என்றார்.

‘முகமூடி’ படத்தின் மூலம் மிஷ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிப்படங்களில் படங்களில் பிஸியாக நடித்துவரும் அவர், மும்பையின் பாந்த்ரா பகுதியில் ₹45 கோடி மதிப்பில் வீடு ஒன்றை வாங்கி உள்ளார். அவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்க ₹2 கோடியும், ஹிந்தியில் நடிக்க ₹ 3 கோடியும் சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

வெயில் காலத்தில் ஏற்படும் தொற்று நோய்களில் இருந்து உடலை தற்காத்துக்கொள்ள தாகச்சமணி மூலிகைக் குடிநீரை பருகலாமென சித்த மருத்துவம் பரிந்துரைக்கிறது. பதிமுகம், கருங்காலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, நன்னாரி, ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம், அதிமதுரம் போன்றவற்றின் தொகுப்பான தாகச்சமணி மூலிகைப் பொடியை (ஒரு தேக்கரண்டி) ஐந்து லிட்டர் நீரில் போட்டு லேசாகக் கொதிக்க வைத்து, குடிநீராக பயன்படுத்தலாம்.
Sorry, no posts matched your criteria.