News May 2, 2024

செந்தில் பாலாஜியின் தம்பி என்ன ஆனார்?

image

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு மத்தியில், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் 10 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாகவுள்ளார். அவர் வெளிநாட்டிற்கு தப்பிவிட்டதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதனிடையே, கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் வசிக்கும் தனது பெற்றோரை அவர் சமீபத்தில் சந்தித்ததாகத் தெரிய வந்துள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News May 2, 2024

சாதி, மொழி அடிப்படையில் மக்களைப் பிரிக்க காங்., முயற்சி

image

ஆங்கிலேயர்களின் பாரம்பரியத்தை மேம்படுத்த காங்., பாடுபடுவதாக யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி, மொழி, பிராந்தியத்தின் அடிப்படையில் காங்., சமூகத்தைப் பிரிக்க முயல்வதாகக் குற்றம்சாட்டினார். அதனால்தான், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து சிறுபான்மையினருக்கு வழங்க முயற்சிப்பதாகக் காங்கிரசை அவர் விமர்சித்தார்.

News May 2, 2024

தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை

image

சமூக ஊடகங்களில் தேர்தல் கண்ணோட்டத்துடன் போலி வீடியோ பரப்பப்படுவதை தடுக்கக்கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

News May 2, 2024

விவாதத்துக்கு தயாரா? மோடிக்கு கார்கே சவால்

image

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி விவாதிக்க தயாரா? என அக்கட்சியின் தலைவர் கார்கே பிரதமருக்கு சவால் விடுத்துள்ளார். பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த எண்ணம் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கே உள்ளதாக குற்றம் சாட்டினார். மேலும், பொய்களை திரும்பத் திரும்பக் கூறுவதால் அது உண்மையாகி விடாது என்றும் அவர் தெரிவித்தார்.

News May 2, 2024

‘மேதகு’ இசையமைப்பாளர் பிரவீன் குமார் மரணம்

image

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த இசையை வழங்கி, வளர்ந்து வந்த இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் (28) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று உயிரிழந்தார். பிரபாகரனை மையமாக வைத்து உருவான ‘மேதகு’ 1, 2 திரைப்படங்களுக்கு இசையமைத்து மிகவும் புகழ் பெற்றவர். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், தமிழ் உணர்வாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது.

News May 2, 2024

மே.4ஆம் தேதி கத்தரி வெயில் தொடக்கம்

image

‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்தரி வெயில் நாளை மறுநாள் தொடங்கி 28ஆம் தேதி வரை நீடிக்கவுள்ளது. அதாவது, 25 நாள்களுக்கு வெயில் வாட்டி வதைக்க காத்திருக்கிறது. வழக்கத்திற்கு மாறாக ஏப்ரல் மாதத்திலேயே கடுமையான வெயில் பதிவானது. கரூர், தருமபுரி, வேலூர், திருத்தணி உள்ளிட்ட இடங்களில் 100 டிகிரி செல்சியசைக் கடந்து வெயில் பதிவாகும் நிலையில், வரும் நாள்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

News May 2, 2024

குஜராத்தில் ஹாட்ரிக் அடிப்பாரா மோடி?

image

குஜராத்தில் 2014, 2019 தேர்தல்களைப் போல 26 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியைப் பெற பிரதமர் மோடி தீவிரமாக முயற்சிக்கிறார். கடந்த 2 நாட்களாக சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர், ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இம்முறை வெற்றிக் கணக்கைத் தொடங்க முடிவெடுத்துள்ள காங்கிரஸ், பிரியங்காவை களம் இறக்கிவிட்டுள்ளது. அங்கு மே7இல் தேர்தல் நடைபெறுகிறது.

News May 2, 2024

பேருந்து கதவு கழன்று விழுந்து பெண் காயம்

image

திருச்சியைத் தொடர்ந்து சென்னையிலும் அரசுப் பேருந்துகளில் பாதுகாப்பு பிரச்னை, அதிகரித்துக்கொண்டே வருகிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆவடி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து திருமங்கலம் பேருந்து நிறுத்தமருகில் வந்தபோது, அதன் தானியங்கி கதவு திடீரென கழன்று விழுந்தது. இது பேருந்துக்காக காத்திருந்த பெண் மீது விழுந்தது. வலியில் துடித்த அவரை, சக பயணிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News May 2, 2024

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்

image

தமிழ்நாட்டிற்கு தீவிர வெப்ப அலைக்கான ‘ஆரஞ்சு’ மற்றும் வெப்ப அலைக்கான ‘மஞ்சள்’ என ஒரே நேரத்தில் 2 எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தி.மலை, சேலம், திருச்சி, திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News May 2, 2024

6 மாதத்துக்கு முன்பே கெஜ்ரிவால் கைதாகி இருப்பார்

image

அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் முன்பே ஆஜராகி இருந்தால் 6 மாதத்துக்கு முன்பே கைது செய்யப்பட்டிருப்பார் என அமித்ஷா கூறியுள்ளார். ED பலமுறை அழைத்தும் கெஜ்ரிவால் விசாரணைக்கு வர மறுத்ததாக தெரிவித்த அவர், இந்த வழக்கில் பாஜக எந்த விதத்திலும் தலையிடவில்லை என்றார். திகார் சிறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது கெஜ்ரிவாலை கொல்ல சதி என்பது நகைச்சுவை என்றும் அவர் கூறினார்.

error: Content is protected !!