India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூகுள், அமேசான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும், டிஜிட்டல் விளம்பர சேவைகளுக்கான 6% வரியை இந்தியா நீக்கவுள்ளது. இது வரும் ஏப்.1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. USA இடையேயான வர்த்தக பதற்றத்தை தணிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வரிச்சுமையால் இந்திய நிறுவனங்களின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செலவுகள் அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஹுசைனியின் உடல் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள உறவினர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், காஜிமார் தெரு பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டு, அங்குள்ள கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
மாரடைப்பால் காலமான நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் (48) உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, அவரது உடலுக்கு தந்தை பாரதிராஜா, மகள்கள் ஆகியோர் கண்ணீருடன் இறுதிச்சடங்குகளை செய்தனர். பாக்யராஜ், சீமான், வைரமுத்து உள்ளிட்டோர் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். பல கதாபாத்திரங்கள் மூலமாக நம் மனதில் இடம்பிடித்த மனோஜ், இறுதியாக காற்றோடு காற்றாக கலந்துவிட்டார். REST IN PEACE MANOJ.
EPS – அமித் ஷா சந்திப்பு, அதிமுக – பாஜக கூட்டணியை கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது. ஒருவேளை, இக்கூட்டணி அமைந்தால், இவர்களுக்கு வாக்கு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. ஆனால், திமுக கூட்டணி பலமாக இருப்பதால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்தக் கூட்டணி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அமித்ஷா – இபிஎஸ் சந்திப்பு அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என்ற யூகத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இபிஎஸ் நேரடியாக பதில் அளிக்கவில்லை. கூட்டணி அமையும்போது தங்களிடம் தெரிவிப்பேன் எனக் கூறிய அவர், ஒவ்வொரு கட்சியும் தேவைக்கு ஏற்ப கூட்டணி முடிவெடுக்கும் எனக் குறிப்பிட்டார். கூட்டணி அரசு அமையும் என்ற அமித்ஷாவின் பதிவு அவரது கட்சியின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
1972-ல் திமுக பொருளாளராக இருந்த எம்ஜிஆர், கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என திமுக பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது என கேள்வி எழுப்பினார். இது திமுகவிற்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதால், அவர் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததே அதிமுக என்ற கட்சி தோன்ற காரணமாக அமைந்தது.
வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ? உ.பி.-யில் கர்ப்பிணியாக இருந்த சுமிதா என்பவரை, வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார், மாமியார் ஆகிய மூவரும் சித்ரவதை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சுமிதாவின் கழுத்தை நெரித்து அந்த கொலை செய்துள்ளனர். பெண்ணின் தந்தை தொடுத்த வழக்கில், 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
தொடர் தோல்வியால் துவண்டு போன பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. ஏற்கெனவே தொடரை இழந்த அந்த அணி கடைசி போட்டியிலும் சொதப்பியது. தொடக்கம் முதலே தடுமாறிய அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர் டிம் சீஃபர்ட் 97 ரன்கள் விளாச 10 ஓவரில் நியூசிலாந்து எளிதாக வெற்றி பெற்று தொடரை 4 – 1 என கைப்பற்றியது.
48 வயதில் மாரடைப்பால் மறைந்த நடிகர் மனோஜின் ஒரு ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய்விட்டது. தந்தை பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் 1978-ல் வெளியான சிவப்பு ரோஜாக்கள் படத்தின் 2ம் பாகத்தை இயக்க மனோஜ் விரும்பினார். சிம்பு, ஷ்ருதிஹாசனை முக்கிய கதாபாத்திரமாக வைத்து படமாக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன்பே மனோஜ் மறைந்துவிட்டார்.
இந்தியா- சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை, விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவிற்கான சீன தூதர் வெய் தெரிவித்துள்ளார். வரும் ஏப்.1ஆம் தேதி, இருநாடுகளுக்கு இடையேயான 75 ஆண்டுகால ராஜதந்திர உறவை கொண்டாட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா, எல்லை மோதல்கள் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை, கடந்த 5 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.