India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளை உள்ளடக்கிய, ஜி7 நாடுகளின் 50வது உச்சி மாநாடு, இன்று தொடங்கி வருகிற 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தார். அந்த வகையில், 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இன்று இத்தாலி செல்கிறார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாமக தலைமை இன்று ஆலோசனை செய்யவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, அமமுக, பாமக என அனைவருமே விக்கிரவாண்டியில் போட்டியிட விரும்புவதால் சலசலப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக தலைவர்கள் கூடுகின்றனர்.

பெங்களூருவில் கடந்த மே 19ஆம் தேதி நடந்த ரேவ் பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, தெலுங்கு நடிகை ஹேமா கைது செய்யப்பட்டார். இவர் உள்பட 27 பெண்கள் போதைப்பொருள் உட்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில், பார்ட்டி நடந்த சில நாட்களுக்கு பிறகே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், மேலும் அவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் கூறி ஹேமாவிற்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

குவைத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகச் சொல்லப்படுகிறது. கரும்புகை வேகமாக அனைத்து குடியிருப்புகளுக்குளும் புகுந்ததால், கண் விழித்தவர்கள் கூட கட்டடத்தை விட்டு வெளியேறாத நிலை ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தவெக கட்சி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் தவெக போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். 2026 வரை மக்கள் பணி மட்டுமே செய்வோம் என்றும், மக்களும், கட்சி நிர்வாகிகளும் குழப்பிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவிடம் அமெரிக்கா நேற்று 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி குறித்து அமெரிக்க அணி கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் கூறியபோது, தங்களது அணி 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்து விட்டதாகவும், கூடுதலாக 20 ரன்கள் சேர்த்து 130 ரன்கள் குவித்து இருந்தால் போட்டி முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு அண்ணாமலை அவசியம் என்று டெல்லி தலைமை தீவிரமாக நம்புவதாகத் தெரிகிறது. நேற்று தமிழிசையை அமித் ஷா கடிந்துக் கொண்ட விதம் அதனை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியை முறிக்காவிட்டால் பாஜக சில எம்பிக்களை பெற்றிருக்கும் என்று விமர்சனங்கள் எழுந்தாலும் கூட்டணி முறிவுக்கு வித்திட்ட அண்ணாமலையின் முடிவை மேலிடம் முழு மனதாக ஏற்றிருப்பது தெரிய வருகிறது.

உடல் எடை அதிகரித்ததால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாக நடிகை நமிதா தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்து கொண்ட நமிதா, தனக்கு நேரிட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், திடீரென உடல் எடை அதிகரித்ததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும், எனினும் உடற்பயிற்சி உள்ளிட்டவை மூலம் 21 கிலோ உடல் எடையை குறைத்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜனை அமித் ஷா பொது வெளியில் கண்டிப்பது போன்ற வீடியோ வெளியான நிலையில், இது தமிழிசையின் சுய மரியாதைக்கு இழுக்கு என காண்போர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவரை மாநிலத் தலைவராக்கி, ஆளுநராக்கி அழகு பார்த்தது பாஜகதான். இந்த நிலையில், தமிழிசை என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. சகித்துக் கொள்வாரா? பாஜகவுக்கு எதிராக சாட்டையை சுழற்றுவாரா?

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இரவு 10 மணியளவில் பெய்ய தொடங்கிய கனமழை 2 மணி நேரத்திற்கும் மேலாக விடாது நீடித்தது. அத்துடன், பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Sorry, no posts matched your criteria.