India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, பெங்களூருவில் பெண் ஒருவரிடம் ரூ.3.9 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் 171வது படத்தில் நடிக்க நடிகர், நடிகையர் தேர்வு நடப்பதாக சமூகவலைதளத்தில் விளம்பரம் வந்துள்ளது. இதை நம்பிச் சென்ற மிருதுளாவிடம், ஒரு கும்பல் பணம் வாங்கிக்கொண்டு ஓடிவிட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் பதவியை தமிழிசை நேற்று ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கும் கடிதம் அனுப்பி இருந்தார். அவரின் ராஜினாமாவை ஏற்று, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் ( ஜார்கண்ட் ஆளுநர்) கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் முர்மு அறிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதால், தமிழிசை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாக உள்ளதாக காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் காங்., செயற்குழு கூட்டத்தில் தேர்தல் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் வெளியிடப்படும் என்றார். கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான வாக்குறுதிகள் குறித்து விவாதிக்க உள்ளதாகத் தெரிகிறது.
தேமுதிக சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றும், நாளையும் (மார்ச் 19, 20) சென்னை தேமுதிக அலுவலகத்தில் விருப்பமனு பெறலாம். பொதுத் தொகுதியில் போட்டியிட ₹15,000, தனித் தொகுதியில் போட்டியிட ₹10,000 கட்டணம் செலுத்தி விருப்ப மனுவை பெறலாம். தொடர்ந்து, மார்ச் 21ல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடமும் நேர்காணல் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தது. இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள் குறிவைக்கப்பட வாய்ப்புள்ளது என AIMIM கட்சித் தலைவர் ஓவைசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இத்துடன் சேர்த்து இந்த சட்டத்தின் மீது தொடரப்பட்ட 262 வழக்குகள் மீதும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. 3D தொழில்நுட்பத்தில், பீரியட் படமாக உருவாகும் இப்படத்தில் 2 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தெரிகிறது. இந்நிலையில், மாலை டீசர் வெளியாவதை குறிப்பிட்டு படத்தின் புதிய போஸ்டரை சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பை அந்நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் விமர்சித்துள்ளார். டிரம்ப் நமது அடிப்படை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜோ பைடனும் நானும் இணைந்து நமது உரிமைகளைப் பாதுகாப்போம். துப்பாக்கி வன்முறை கலாச்சாரத்தை எடுத்துரைப்போம். டிரம்புக்கும் எங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெளிவாக உள்ளது, என்று அவர் டிவீட் செய்துள்ளார்.
காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம். 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்க உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இன்று முதல் நாளை (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சிக்கான டோக்கன் வழங்கியதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அளித்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நடத்தை விதியை மீறியதாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென்கோடி தொகுதியான குமரி, எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், சாதிரீதியான வாக்குகளைவிட மதரீதியான வாக்குகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. இதுவரை இங்கு நடந்த 4 தேர்தல்களில் திமுக 1, காங். (கூட்டணி) 2, பாஜக 1 என வெற்றி பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.