News June 13, 2024

தீ விபத்தில் பலியானவர்களுக்கு கமல் இரங்கல்

image

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நடைபெற்ற பயங்கர தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மநீம தலைவர் கமல்ஹாசன், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் உடல்நலம் பெற வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவும் வெளியுறவுத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News June 13, 2024

T20 WC: நான்கு அணிகள் தகுதி பெற்றது

image

T20 உலகக்கோப்பையில் மொத்தம் 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து ஆடி வருகின்றன. இதில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் 2 அணிகள் அடுத்த சுற்றுக்கு (சூப்பர் 8) தகுதிபெறும். தற்போது, 4 பிரிவில் இருந்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளது. மீதம் உள்ள 4 இடங்களுக்கு 14 அணிகள் போட்டியிடுகின்றன. இதில் எந்த 4 அணிகள் தகுதிபெறும் என நினைக்கிறீர்கள்?

News June 13, 2024

மோடி 3.0 அமைச்சரவையில் 99% பேர் கோடீஸ்வரர்கள்

image

மோடி தலைமையிலான தற்போதைய அமைச்சரவையில், 99% அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனவும், 39% அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ₹107.94 கோடியாகும். மொத்தமுள்ள 71 மத்திய அமைச்சர்களில், 28 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில், 19 பேர் மீது கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட கடுமையான வழக்குகள் இருக்கின்றன.

News June 13, 2024

இளம் வழக்கறிஞர்களுக்கு ₹20000 வழங்க ஆணை

image

சென்னை போன்ற நகரங்களில் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹20000, பிற மாவட்டங்களில் பணிபுரிவோருக்கு ₹15000 வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சட்டப் படிப்பு முடித்த மாணவர்கள், பயிற்சி பெறும்போது அவர்களுக்கு ₹8000 வரை வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News June 13, 2024

நாளை கடைசி: தமிழக அரசில் 118 பணியிடங்கள்

image

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 118 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குநர், மேலாளர், முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 – 37 வயதுடையவர்கள் <>tnpsc.gov.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் ஜூன் 19 முதல் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இதற்கான தேர்வு ஜூலை 28ஆம் தேதி நடைபெறும்.

News June 13, 2024

பயங்கரவாதத்தை ஒடுக்க அதிரடி உத்தரவிட்ட மோடி

image

ஜம்மு காஷ்மீரில் நிலவி வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர, பாதுகாப்புப் படையினர் முழு பலத்தையும் பயன்படுத்த பிரதமர் மோடி அனுமதி அளித்துள்ளார். 4 நாள்களாக நடந்துவரும் தீவிரவாத தாக்குதலை ஒடுக்குவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அறிவுறுத்தியுள்ளார்.

News June 13, 2024

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை

image

சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நந்தனம், வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் உள்பட சென்னை முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதேபோல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News June 13, 2024

2ஆவது திருமணம் செய்தார் நடிகை ஸ்ரீதிகா

image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீதிகா, ‘கோகுலத்தில் சீதை’, ‘மகராசி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். 2020ஆம் ஆண்டு சனீஷ் என்பவரை திருமணம் செய்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். இந்நிலையில், ‘மகராசி’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த ஆர்யனை காதலித்து வந்த நிலையில், அவரை மறுமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்.

News June 13, 2024

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம்

image

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014ஆம் ஆண்டு என்.எஸ்.ஏ-வாக நியமிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் 2019இல் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது. அத்துடன் அவரது பதவி, அமைச்சர் அந்தஸ்துக்கும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 3ஆவது முறையாக அவரை என்.எஸ்.ஏ-வாக நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மோடியின் 3 அரசிலும் அவர், இதே பதவியில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

News June 13, 2024

நீட் தேர்வு: “6 மையங்களுக்கு தவறான வினாத்தாள்”

image

நீட் தேர்வில் 6 மையங்களுக்கு தவறான வினாத்தாள் அனுப்பப்பட்டதாகவும், பின்னர் சரியான வினாத்தாள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவுபடுத்தியுள்ளார். கருணை மதிப்பெண் பெற்ற 1563 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தேர்வு எழுதாவிடில் முந்தைய மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். வினாத்தாள் குளறுபடி தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்

error: Content is protected !!