India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திமுகவின் முப்பெரும் விழா கோவையில் ஜூன் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த முப்பெரும் விழா திமுகவின் வீண் விளம்பரம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், மத்திய அரசின் நிதியை திமுக அரசு முறையாக பயன்படுத்தவில்லை என குற்றம்சாட்டிய அவர், “சாலையைக் கூட ஒழுங்காக போட முடியாத அரசுக்கு முப்பெரும் விழா ஒரு கேடா?” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட 77 சதவீத குடும்பங்களில், கடந்த 5 ஆண்டுகளாக வருமானம் அதிகரிக்கவில்லை என Redseer என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில், பல குடும்பங்கள் சீரற்ற வருவாயை கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், இவர்கள் மொத்த வருவாயில் 20%க்கும் குறைவாகவே சேமிப்பதாக தெரிகிறது. தேசிய சராசரி 30% என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி தொடர்பான முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டிம் பெய்னின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இருந்து ENG அணி போட்டியில் இருந்து வெளியேறினால், AUS அணி எளிதாக பட்டம் வெல்ல முடியுமெனக் கூறிய டிம் பெய்ன், இதனை தான் நகைச்சுவையாக கூறவில்லை என்றார். AUS அணி இம்முறை கோப்பையை வென்றே தீர வேண்டும் எனவும் அதற்குரிய உத்திகளை கையாள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மக்களவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 292, INDIA கூட்டணி 234 இடங்களில் வென்றன. ஜூன் 9ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. இதைத் தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி, தேர்தலில் வெற்றி பெற்ற MP-க்கள் வாக்கு செலுத்தி மக்களவைத் தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தவெகவில் நடிகர்கள் லாரன்ஸ், பாலா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் மக்கள் தொண்டில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிற கட்சிகள் தங்கள் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த முறை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ் செல்வன் 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

குவைத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில், 45 இந்தியர்கள் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த பலர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உதவிய குவைத் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 1 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அம்புஜா சிமெண்ட்ஸ், பென்னா சிமெண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை (PCIL) ₹10,422 கோடிக்கு வாங்கியுள்ளது. PCIL தலைவர் பிரதாப் & அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள அந்நிறுவனத்தின் 100% பங்குகள் மாற்றப்படும் என அம்புஜா சிமெண்ட்ஸ் சி.இ.ஓ அஜய் கபூர் தெரிவித்துள்ளார். PCIL, ஆண்டுக்கு 14 மில்லியன் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலைக் கட்டமைப்பு & திறனைக் கொண்டுள்ளது.

T20 உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்கள் முடிவில் 159/5 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக பேட்டிங் செய்து 38 பந்துகளில் அரை சதம் அடித்த ஷகிப் அல் ஹசன், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 64* ரன்களும், தன்ஷித் ஹசன் 35, மஹ்மதுல்லா 25 ரன்களும் எடுத்தனர். நெதர்லாந்து சார்பில் ஆர்யன் தத், மீகெரென் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.