News May 2, 2024
CSK-க்கு வந்த அடுத்த சோதனை

நேற்று PBKS-க்கு எதிரான போட்டியில் ஃப்ளூ காய்ச்சல் காரணமாக CSK-வின் தேஷ்பாண்டே விளையாடவில்லை. தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டியில் விளையாடுவாரா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே முஸ்தஃபிசூர் நாடு திரும்பி விட்டார். தீபக் சஹாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. பதிரனாவும் விசா நடைமுறைக்காக இலங்கை திரும்பியதால், CSK அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News December 14, 2025
பொங்கல் பரிசுத் தொகை.. அமைச்சர் HAPPY NEWS

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கப் பரிசை திமுக அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பரிசில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹1,000 வழங்கப்படுமா என அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ₹1,000 வழங்கும் அதிகாரம் என்னிடம் இல்லை என்ற அவர், CM உத்தரவின் பேரிலேயே செயல்படுவோம் என்றார். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
News December 14, 2025
பெண்கள், SC/ST பிரிவினருக்கு முன்னுரிமை!

மத்திய அரசு பணிகளில், முக்கிய பதவிகளுக்கு பெண்கள், SC/ ST பிரிவினரை சேர்ந்த அதிகாரிகளை அதிக அளவில் பரிந்துரை செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்து தலைமை செயலர்களுக்கும் மத்திய பணியாளர் அமைச்சகம் இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெண்கள், SC/ ST பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
News December 14, 2025
நாளை அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா இருங்க!

தமிழகத்தில் நாளை (டிச.15) 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. டிச.23 வரை தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு டிச.10 முதல் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST


