News June 17, 2024

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்

image

இந்திய ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் தொடர்ந்து அதிக பங்களிப்பு வழங்கும் மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஜவுளிப் பொருட்கள் ஏற்றுமதி 2023-2024 நிதியாண்டில் 34.43 பில்லியன் அமெரிக்க டாலராகும். இதில் தமிழகம் 20.78% (7.15 பில்லியன் டாலர்), குஜராத் 15.36% (5.29 பில்லியன் டாலர்), மகாராஷ்டிரா 11.54% ஆக (3.97 பில்லியன் டாலர்) உள்ளதாக இந்திய ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

News June 17, 2024

மோடி குறித்த கேள்விக்கு கனடா பிரதமர் மழுப்பல் பதில்

image

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொலை செய்யப்படுவதற்கு இந்தியா மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், 2025இல் கனடாவில் நடக்கும் ஜி7 மாநாட்டுக்கு மோடியை அழைப்பீர்களா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அடுத்தாண்டு கனடா ஜி7 தலைமையேற்கும் போது அது குறித்து நிறைய பேச வேண்டியிருப்பதாக மழுப்பலாக பதிலளித்தார். மோடி அழைக்கப்படுவாரா, இல்லையா என நேரிடையாக பதிலளிக்கவில்லை.

News June 17, 2024

T20 WC: நெதர்லாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு

image

இலங்கை அணிக்கு எதிரான உலகக் கோப்பை டி20 போட்டியில் நெதர்லாந்து அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி, நேபாள அணியின் பந்துவீச்சை ஆரம்பம் முதலே அடித்து நொறுக்கியது. அந்த அணியின் சரித் அசலங்கா 46, குசல் மெண்டிஸ் 46 ரன்களை குவித்தனர். இலங்கை அணி ஏற்கெனவே தொடரில் இருந்து வெளியேறியதால், இந்த போட்டியில் வென்றாலும் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது.

News June 17, 2024

அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு தடை

image

தமிழகத்தில் நேற்று முன்தினம் காலை 5 மணி முதல் அரசு கேபிள் TV ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கு சாப்ட்வேர் பிரச்னையே காரணம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே 6 மாதங்களுக்கு முன், இதேபோல் பல நாள்கள் ஒளிபரப்பில் தடை ஏற்பட்டது. அப்போது பல வாடிக்கையாளர்கள் தனியார் நிறுவனங்களின் DTHக்கு மாறிவிட்டனர்.

News June 17, 2024

‘தாரே ஜமீன் பர்-2’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

image

சூப்பர் ஹிட்டான ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் 2ஆம் பாகமாக உருவாகி வரும் ‘சிதாரே ஜமீன் பர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ள இப்படத்தில் அமீர்கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்துள்ளார். நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 17, 2024

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் முருகன்

image

முருகப் பெருமான், சூரனை வதம் செய்த பிறகு சினம் தணிந்து, சாந்த சொரூபமாக வந்து அமர்ந்த இடம் தான் திருத்தணி. சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணிகை என இந்த தலம் அழைக்கப்படுகிறது. மற்ற கோயில்களில் இருப்பது போல் இங்குள்ள முருகன் சிலையில் வேல் இருப்பது இல்லை. அலங்காரம் செய்யும் போது மட்டும் வேல் சாற்றப்படுகிறது. முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலம் என்பதால் முருகன் கையில் வேல் கிடையாது.

News June 17, 2024

எம்.பி பதவியை ராஜினாமா செய்யுங்கள்: ஏக்நாத் ஷிண்டே

image

வாக்குப் பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருந்தால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடட்டும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தோற்றதால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறு நடந்துள்ளது என்று கூறுவது நல்ல அரசியல் அல்ல என விமர்சித்துள்ளார். முன்னதாக, இவிஎம் இயந்திரத்தை கருப்பு பெட்டியோடு ஒப்பிட்டு ராகுல் பேசியிருந்தார்.

News June 17, 2024

அதிகாலை நேரம் கனவு வருகிறதா? என்ன பலன்?

image

அதிகாலை நேர கனவுகள் பலிக்கும் என சாஸ்திரம் சொல்கிறது. அதில் இறந்தவர்களின் சடலமோ, துக்க நிகழ்ச்சியோ கண்டால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க உள்ளது என அர்த்தமாகும். விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். அசைவம் சாப்பிடுவது போல கனவு கண்டால் அதிர்ஷ்டம் வர போகிறது என அர்த்தம்.

News June 17, 2024

பங்குச்சந்தைகள், வங்கிகளுக்கு இன்று விடுமுறை

image

இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் இன்று கொண்டாடப்படுவதால், பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தேசிய பங்குச்சந்தை, மும்பை பங்குச்சந்தைகள் இன்று செயல்படாது. இதேபோல் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்டர்நெட் பேங்கிங், ஏடிஎம் சேவைகள், மொபைல் பேங்கிங் சேவைகள் தொடர்ந்து செயல்படும்.

News June 17, 2024

நடிகர் தர்ஷன் கண்முன்னே கொடூரம்

image

ரேணுகாசாமியை கொலையாளிகள் சித்திரவதை செய்தபோது நடிகர் தர்ஷன் அங்குதான் இருந்ததாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். தர்ஷனின் தோழியான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச ஃபோட்டோக்கள் அனுப்பி தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில், அவரைக் கடத்திய தர்ஷனும் அவரது கூட்டாளிகளும் பிறப்புறுப்பில் மின்சாரம் பாய்ச்சி சித்தரவதை செய்து கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!