India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 40 ஆண்டுகளில் திமுகவுக்கு பெரிய அளவில் தேர்தல் வெற்றி கிடைக்காத பகுதி கொங்கு மண்டலம். குறிப்பாக 2016ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கு மிக முக்கிய காரணம் கொங்கு மண்டலத்தில் அடைந்த தோல்வி. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரை அது எதிரொலித்தது. இந்நிலையில், அந்த குறையை போக்கும் விதமாக பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் திமுகவே நேரடியாக களம் காண்கிறது.
CSK போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட்டுகள் எனக்கு கிடைக்கவில்லை என அஷ்வின் வருத்தம் தெரிவித்துள்ளார். X பக்கத்தில் பதிவிட்ட அவர், “ஐபிஎல் டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. எனது குழந்தைகள் போட்டியை பார்க்க விரும்புகிறார்கள்” எனத் குறிப்பிட்டுள்ளார். ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வாங்க குவிந்ததால், இணையதளங்கள் முடங்கின. பின்னர், 10 நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.
காங். சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் நாளை (19.03.24) முதல் நாளை மறுநாள் (20.03.24) வரை விருப்ப மனு பெறப்பட உள்ளது. பொதுத்தொகுதிக்கு ₹30,000, தனித்தொகுதி, மகளிருக்கு அனைத்து தொகுதிகளுக்கும் ₹15,000, சட்டமன்ற தொகுதிக்கு ₹10,000 செலுத்தி மனுவை பெறலாம்.
▶மும்பை இந்தியன்ஸ் – 138 போட்டிகள்,
▶சென்னை சூப்பர் கிங்ஸ் – 131 போட்டிகள்,
▶கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 119 போட்டிகள்,
▶ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 114 போட்டிகள்,
▶டெல்லி கேப்பிட்டல்ஸ் – 105 போட்டிகள்,
▶பஞ்சாப் கிங்ஸ் – 104 போட்டிகள்,
▶ராஜஸ்தான் ராயல்ஸ் – 101 போட்டிகள்,
▶சன்ரைசர்ஸ் ஐதராபாத் – 78 போட்டிகள்
அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் ஓபிஎஸ் இரட்டை இலை, சின்னத்தை பயன்படுத்தி வந்தார். இதற்கு எதிராக இபிஎஸ் தரப்பு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்த தமிழிசை, மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் போட்டியிடவில்லை, தமிழகத்தில் இருந்து போட்டியிட உள்ளதாக கூறினார். மேலும், எந்த தொகுதி என்பதை கட்சித் தலைமை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்யா நடிக்கும் ‘மிஸ்டர் X’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படமானது, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. படத்தில் உள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடலமைப்பை பெற, நடிகர் ஆர்யா கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். படத்தின் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் குழந்தை உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக 6 பேர் ஜீப்பில் சென்றபோது, அதிக பாரத்துடன் வந்த டிராக்டர் ஜீப்பின் மீது மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக 21 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட உள்ளது. அவை, 1. வடசென்னை 2. தென்சென்னை 3. மத்திய சென்னை 4. ஸ்ரீபெரும்புதூர் 5. காஞ்சிபுரம் (தனி) 6. அரக்கோணம் 7. வேலூர் 8. தருமபுரி 9. திருவண்ணாமலை 10. கள்ளக்குறிச்சி 11. சேலம் 12. நீலகிரி (தனி) 13. தஞ்சாவூர் 14. தூத்துக்குடி 15. தென்காசி (தனி) 16. தேனி 17. ஆரணி 18. கோவை 19. பொள்ளாச்சி 20. ஈரோடு 21. பெரம்பலூர் ஆகும்.
திருச்சியில் 23ம் தேதி முதல் இபிஎஸ் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமகவை கொண்டுவரும் முயற்சி பெரும் சவாலாக இருக்கிறது. இதனால், எப்படியாவது 23ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப்பங்கீட்டை முடித்து, அதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.