News June 17, 2024

ரயில் விபத்துக்கு மோடி அரசே காரணம்: கார்கே

image

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் தவறான நிர்வாகமே அடுத்தடுத்து ரயில் விபத்துகள் நிகழ காரணம் என காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். ரயில்வே அமைச்சகத்தை மோடி அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

News June 17, 2024

மதிய நேர குட்டித் தூக்கத்தால் ஏற்படும் நன்மைகள்

image

மதிய நேரம் உணவருந்திவிட்டு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். இதன் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம் * இதய நலன் மேம்படும் * சர்க்கரை, தைராய்டு போன்ற ஹார்மோனல் பிரச்னை சீராகும் * செரிமான பிரச்சினை சரியாகும் * சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் *மன அழுத்தம் குறையும் *நினைவாற்றல் அதிகரிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

News June 17, 2024

தேர்தலால் தள்ளிப்போன துணை முதல்வர் பதவி?

image

மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானதும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம். அப்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளிவந்தபடி இருந்தது. ஆனால், அதற்குள் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதில் திமுக தலைமை கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இதனால், உதயநிதிக்கு இப்போதைக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படாது எனப் பேசப்படுகிறது.

News June 17, 2024

திருப்பதியில் அஜித் சாமி தரிசனம்

image

திருப்பதி திருமலையில் நடிகர் அஜித் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. வேட்டி சட்டையுடன் அம்சமாக காட்சியளிக்கும் அவரது புகைப்படத்தினை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அஜித் தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.

News June 17, 2024

பேரனைக் கொன்ற தாத்தா கைது

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஜோதிடத்தை நம்பி, பிஞ்சுக் குழந்தையைக் கொன்ற தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார். சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். அதனை நம்பி, பிறந்து 38 நாள்கள் மட்டுமே ஆன பேரனை தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொலை செய்திருக்கிறார் தாத்தா வீரமுத்து.

News June 17, 2024

படம், வெப் சீரிஸ்களைப் பார்க்க சம்பளம்!

image

தியேட்டர், ஓடிடியில் கட்டணம் செலுத்தி படம் பார்ப்பது வழக்கம். இதற்கு மாறாக, நிறுவனமொன்று படம் பார்ப்போருக்கு சம்பளம் வழங்குகிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளம். Creative analyst அல்லது Tagger என்ற பெயரில் ஆட்களைத் தேர்வு செய்கிறது. அவ்வாறு தேர்வு செய்யப்படுவோர், படம், வெப் சீரிஸ்களைப் பார்த்து, தங்களது கருத்துகளை Tag ஆக உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்வோருக்கு நெட்ஃப்ளிக்ஸ் பணம் வழங்குகிறது.

News June 17, 2024

₹10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

image

மேற்குவங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு ₹10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பலத்த காயமடைந்தோருக்கு ₹2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ₹50,000 நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இவ்விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

News June 17, 2024

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் (1/2)

image

இந்தியாவில் இதுவரை நடந்த ரயில் விபத்துகளில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியவை குறித்து தெரிந்து கொள்வோம். *பிஹாரில் 1981இல் ரயில் ஆற்றுக்குள் கவிழ்ந்ததில் 800 பேர் பலியாகினர் *1995இல் ஆக்ரா அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர் *1998இல் பஞ்சாபில் ரயில் தடம்புரண்டதில் 210 பேர் பலியாகினர் *1999இல் மே.வங்க மாநிலத்தில் 2 ரயில்கள் மோதியதில் 285 பேர் உயிரிழந்தனர்.

News June 17, 2024

இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள் (2/2)

image

*2002இல் கொல்கத்தா- டெல்லி ராஜ்தானி விரைவு ரயில், தாப்தி நதிக்குள் விழுந்ததில் 120 பேர் பலியாகினர் *2010இல் மே.வங்கத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 146 பேர் கொல்லப்பட்டனர் *2016இல் உத்தரப் பிரதேசத்தில் இந்தூர்-பாட்னா விரைவு ரயில் தடம்புரண்டதில் 140 பயணிகள் பலியாகினர் *2023இல் ஒடிஷாவில் கோரமண்டல் ரயில் விபத்தில் சிக்கியதில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

News June 17, 2024

தமிழகத்தில் அதிகரிக்கும் ஆணவக்கொலை: சிபிஎம்

image

கட்சியின் அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்னன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், காவல்துறையின் பார்வையாளராக தமிழக அரசு இருப்பதை ஏற்க முடியாது என்றார். கலப்பு திருமணம் செய்து வைத்த காரணத்தால் நெல்லை சிபிஎம் அலுவலகத்தை பெண் வீட்டார் சூறையாடியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!