News July 14, 2024

சென்னை, கோவையில் கொரோனா

image

தமிழகத்தில் மீண்டும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக கொரோனா என்ற பேச்சே இல்லாமல் இருந்த நிலையில், சமீப நாள்களாக கொரோனா செய்தி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை, கோவையில் தலா 3 பேர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா குறித்து தேவையில்லாத அச்சம் வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

News July 14, 2024

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி

image

பாகிஸ்தானிலிருந்து காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல், தாக்குதல்கள் சமீப நாள்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரண் கிராமத்தில் ரோந்து சென்ற ராணுவத்தினர், அங்கு ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News July 14, 2024

உங்கள் ஆதார், மொபைல் எண் மூலம் மோசடி நடக்கிறதா?

image

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்களின் எண்ணிக்கையை அறியும் வழி…
*https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ இணைய முகவரிக்கு செல்லவும்.
*உங்கள் 10 இலக்க மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை பதிவு செய்தபின், வேலிடேட் கேப்ட்சா என்பதை கிளிக் செய்யவும்.
*உங்கள் மொபைலுக்கு வந்துள்ள OTP-ஐ பதிவு செய்து லாகின் செய்யவும்.
*இப்போது உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட தேவையில்லாத எண்களை, பிளாக் செய்யலாம்.

News July 14, 2024

சாம்பியன் பட்டம் வென்ற 21 வயது இளம் வீரர்

image

விம்பிள்டன் தொடரில் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி, இளம் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இன்று விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் 6 -2, 6 -2, 7-6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம், ரோஜர் பெடரருக்கு பிறகு 21 வயதில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

News July 14, 2024

ஜெகநாதர் கோயில் கருவூலம் கணக்கிடப்பட்ட வரலாறு

image

பூரி ஜெகநாதர் கோயில் கருவூலம் 46 ஆண்டுகளுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. 1978ஆம் ஆண்டு கருவூலம் திறக்கப்பட்டு, அதில் இருந்த பொக்கிஷங்கள் எண்ணப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணிகள் 70 நாள்கள் நடைபெற்றது. அதில், 128.38 கிலோ எடையுள்ள தங்கம், 221.53 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து, 1982 மற்றும் 1985ஆம் ஆண்டு கருவூலம் திறக்கப்பட்டது. ஆனால், ஆபரணங்கள் எண்ணிப்படவில்லை.

News July 14, 2024

ஆளுநர் தங்கியிருந்த பகுதியில் 200 சவரன் கொள்ளை

image

விருதுநகரில், ஆளுநர் ரவி தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் 200 சவரன் கொள்ளைபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க சென்ற அவர், RRநகரில் தங்கியிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ராம்கோ சிமெண்ட் நிறுவன துணை மேலாளர்கள் பாலமுருகன், ராமச்சந்திரன் வீடுகளில் நகை திருடப்பட்டுள்ளது. ஆளுநர் தங்கியிருந்த பகுதியிலேயே, நகை கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 14, 2024

ரேஷனில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்?

image

ரேஷன் கடைகளில் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதில் அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்து குடும்ப அட்டைதாரர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் அரசு இறுதி முடிவு எடுக்கும். 2 நாள்களுக்கு முன், ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய்யை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 14, 2024

ஆடி மாத இலவச ஆன்மிகப் பயணத்திற்கு அழைப்பு

image

தமிழக அரசின் கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்தில் 60-70 வயதுடைய மூத்த குடிமக்கள் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. ஆடி மாதத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் 1000 பேர் அழைத்து செல்லப்படுவர். அறநிலையத்துறை இணை ஆணையர், உதவி ஆணையர், ஆய்வாளர், கோயில் அலுவலகங்கள் மற்றும் hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறலாம்.

News July 14, 2024

வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்: நிதி ஆயோக்

image

இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 92 புள்ளிகளுடன் வறுமை ஒழிப்பில் முதலிடம், 81 புள்ளிகளுடன் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் 2ஆவது இடம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான குறியீட்டில் 78 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும் தமிழகம் பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

News July 14, 2024

திமுக தவறான அணுகுமுறை: ஜி.கே.வாசன்

image

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரின் தவறான அணுகுமுறையை கடந்தும், பாமக வேட்பாளர் சுமார் 55 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கான நல்ல செய்தி எனக் கூறிய அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!