India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பைக்கு எதிரான போட்டியில் 2 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா அணியின் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 158 இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் இஷான் கிஷன், ரோஹித் ஜோடி அதிரடி காட்ட முயன்ற நிலையில், அதை ஆரம்பத்திலேயே தனது பந்து வீச்சு மூலம் கட்டுப்படுத்தினார். ரோஹித், பாண்டியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தி, கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
செயற்கை குளிர்பானங்களில் அதிக அளவு கலோரிகள் உள்ளன, இது எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும். மேலும் செயற்கை குளிர்பானங்கள் டைப் 2 நீரிழிவு நோய்க்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும். அதுமட்டுமின்றி செயற்கை குளிர்பானங்கள் குடிப்பது இதய நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கலாம். அதிக அளவு செயற்கை குளிர்பானங்களை குடிப்பது கல்லீரல் பாதிப்புக்கு வழிவகுக்கும்.
➤907 – சீனாவில் 300 ஆண்டுகளுக்கு பின்னர் தாங் அரசமரபு ஆட்சி இழந்தது.
➤1784 – பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
➤1949 – சோவியத் ஒன்றியம் பெர்லின் மீதான முற்றுகையை நிறுத்தியது.
➤2003 – ரியாத் நகரில் அல் கொய்தா மேற்கொண்ட தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
➤2015 – நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 218 பேர் உயிரிழந்தனர்.
அருண்குமார் இயக்கத்தில், விக்ரம் ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்து வரும் இந்த படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்பொழுது படத்தின் புதிய போஸ்டரை வெளியாகி உள்ளது.
◾பால்: பொருட்பால்
◾அதிகாரம்: அறிவுடைமை
◾குறள்: 421
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
◾விளக்கம்:
பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்.
பயங்கரவாதிகளுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பொக்ரானில் அணு ஆயுத சோதனை செய்து இந்தியா சாதனை படைத்ததாக கூறிய அவர், பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி மக்களை அச்சுறுத்துவதாக விமர்சித்தார். பாகிஸ்தான், தான் வைத்திருக்கும் அணுகுண்டை பராமரிக்க கூட பணம் இல்லாமல் திண்டாடி வருவதாகவும் பிரதமர் மோடி அந்நாட்டை கிண்டலடித்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை மும்பைக்கு எதிராக போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனையை அந்த அணி படைத்தது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இன்று (மே 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பிரதமரின் பேச்சில் இருந்த கர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தால் மத்திய அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், மோடி மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியமைப்பது மிகவும் கடினம் என்றார். நாட்டில் உள்ள ஏழை மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பாஜக தவறவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா 157/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடி மும்பை அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார்.
Sorry, no posts matched your criteria.