News March 30, 2024

தமிழ்நாட்டில் 1,090 மனுக்கள் ஏற்பு

image

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் தாக்கலான 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரத்தில் தலா 13 மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கின்றன.

News March 30, 2024

ஆண்ட்ரியா படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்

image

ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா: தி பாரஸ்ட்” படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என சசி பிசினஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இப்படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

News March 30, 2024

விசிகவுக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு

image

மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும், விழுப்புரம் தொகுதியில் ரவிகுமாருக்கும் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

ரூ.50 ஆயிரம் ரொக்க பண வரம்பில் மாற்றம்?

image

ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுத்து செல்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுத்துச் செல்வதில் பல்வேறு பிரச்னைகள் நிலவுகிறது. இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்திடம் இந்த விவகாரத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் இதுதொடர்பாக முடிவெடுப்பார்கள்” என்றார்.

News March 30, 2024

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுக திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. வைகோவின் மகன் துரை வைகோ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பம்பரம் சின்னம் கேட்ட மதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தீப்பெட்டி சின்னம் கேட்ட நிலையில், அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

News March 30, 2024

ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

image

ஏப்ரல் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் வங்கிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை வருகிறது. ஏப்.1 இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக மக்களுக்கு சேவை கிடையாது. ஏப்.9 தெலுங்கு புத்தாண்டு, ஏப்.10 (அ) ஏப்.11 ரம்ஜான், ஏப்.19 தமிழகத்தில் தேர்தல். இத்துடன் (ஏப்.7, 14, 21, 28) ஞாயிற்றுக்கிழமைகள், 2வது (ஏப்.13), 4வது (ஏப்.27) சனிக்கிழமைகளில் விடுமுறையாகும். இதற்கேற்ப உங்கள் நிதி தேவையை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.

News March 30, 2024

10,000 தேர்தல் பத்திரங்களை அச்சிட மத்திய அரசு ஒப்புதல்?

image

தேர்தல் பத்திரம் அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு 3 நாள்களுக்கு முன்பு, 10,000 பத்திரங்களை அச்சிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது அம்பலமாகியுள்ளது. ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, தலா ரூ.1 கோடி மதிப்பு கொண்ட 10,000 பத்திரங்களை அச்சிட ஒப்புதல் அளித்தது, 2 வாரங்களுக்கு பிறகு நிறுத்த எஸ்பிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது தெரிய வந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

News March 30, 2024

பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி

image

வேட்டையாடு விளையாடு படத்தில் பிணத்திற்கு டேனியல் பாலாஜி மேக்கப் போட்டுள்ளார். அந்த படத்தில் ஒரு காட்சிக்காக பிணத்திற்கு மேக்கப் போட வேண்டியிருந்தது. அதற்கு வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் அதிக தொகையை கேட்டுள்ளனர். இதனால் கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் யோசித்த நிலையில், தான் மேக்கப் போட்டு விடுவதாக கூறி, பிணத்திற்கு மேக்கப் போட்டுள்ளார். இதை டேனியல் பாலாஜி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

News March 30, 2024

வேட்பு மனு வாபஸுக்கான அவகாசம் நிறைவு

image

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிவடைந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட 1,749 பேர் மனுத்தாக்கல் செய்த நிலையில், 1,085 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகிறது.

News March 30, 2024

மன்சூர் அலி கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்

image

மன்சூர் அலி கானை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக அதன் தலைவர் மன்சூர் அலி கான் வேலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் அவர் குற்ற வழக்குகள் தொடர்பான விவரத்தை மறைத்துள்ளார் எனக்கூறி சென்னையை சேர்ந்த பாரி என்பவர் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். புகார் தொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

error: Content is protected !!