India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவாக இருப்பதாக தெரிவித்த அவர், இருந்தாலும் மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு திரும்பப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மின் கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

நயினார் நாகேந்திரனை தமிழக பாஜக தலைவராக நியமிக்க மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை படிப்புக்காக வெளிநாடு செல்ல மோடி அனுமதித்துள்ளதாகவும், அடுத்த மாதம் அண்ணாமலை வெளிநாடு செல்வார் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நயினாருக்கு தலைமை பொறுப்பு வழங்கப்படும் எனவும், அண்ணாமலை திரும்பி வந்தால் தேசிய அளவில் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஜூலை – 20 | ஆடி – 4
▶கிழமை: சனி
▶நல்ல நேரம்: 07:45 AM – 08:45 AM, 04:45 PM – 05:45 PM
▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM, 09:30 PM – 10:30 PM
▶ராகு காலம்: 09:00 AM – 10:30 AM
▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM
▶குளிகை: 06:00 AM – 07:30 AM
▶சூலம்: கிழக்கு
▶பரிகாரம்: தயிர் ▶திதி : சதுர்த்தசி

எம்.பி தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதற்கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 24ஆம் தேதி தேனி, ஆரணி, 25இல் தென்காசி, ஈரோடு தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள படுகிறது. காலை, மாலை என இரு வேளைகளில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தலைவர்களை கொலை செய்து விட்டு பெயர் வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் ரவுடிகள் சுற்றி திரிவதாக கூறிய அவர், சீமான், கிருஷ்ணசாமி, திருமாவளவன் உள்ளிட்டவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டுவந்த பாதுகாப்பை மீண்டும் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காரணம் இன்றி மனிதர்களை வெறுக்கும் போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத பதட்டத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை நேசிக்கத் தொடங்குங்கள். எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, நமக்கு மிகவும் நல்லது. வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் அடுத்தது என்ன என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி பயணிக்க முடியும்.

பில்கிஸ் பானு பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற இருவரின் ஜாமின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கில் தண்டிக்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு தண்டனை காலம் முடியும் முன்னரே விடுதலை செய்தது. இதனை எதிர்த்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் விடுதலையை ரத்து செய்து குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைத்தது. இதில் 2 பேர் ஜாமின் கோரி நிலையில், அதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஊழல் அரசை அகற்றுவதே தங்களின் முதல் நோக்கம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை போல் சட்டபேரவை தேர்தலில் பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணிப்பார்கள் என்ற அவர், மகா விகாஷ் அகாதி (I.N.D.I.A) நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றார். இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் தேர்தல் நடைபெற உள்ளது.

➤ முன்னோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள். ➤ யாருக்காவது குழிதோண்ட போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. ➤ மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
➤ பயமில்லாமை தைரியமல்ல, பய நேரங்களிலும் சரியாய் செயல் புரிவதே நிஜ தைரியம்.
➤ எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும்.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு வினாடிக்கு 78 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.