India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாஜக முன்னாள் எம்.பி., மாஸ்டர் மதன் (93) உடலுக்கு, அண்ணாமலை நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் இத்தலார் பகுதியைச் சேர்ந்த மாஸ்டர் மாதன், 1998 மற்றும் 1999-2004 வரை நீலகிரி தொகுதி எம்.பியாக இருந்தவர். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு அவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அண்ணாமலை அங்கு வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 20ஆம் தேதி `லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி’ (LIK) படக்குழு எந்த போஸ்டரையும் வெளியிடாத நிலையில், இன்று அட்டகாசமான சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், லவ் இன்சூரன்ஸ் கம்பனி கட்டடத்திற்கு மேல் கையில் ஒரு வாட்ச் போன்ற ஒன்றை வைத்து, எஸ்ஜே சூர்யா அமர்ந்து இருக்கிறார். இந்த போஸ்டர் மூலம், பிரதீப்-க்கு தொல்லை கொடுக்க போகும் பாஸாக அவர் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு ( இரவு 10 மணி வரை) 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, வெளியே செல்வோர், வாகனத்தில் செல்வோர் பாதுகாப்பாக செல்லவும்.

சரியாக செயல்படாத நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என இபிஎஸ் எச்சரித்துள்ளார். மக்களவை தேர்தல் தோல்வி தொடர்பாக, தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் அவர் ஆலோசித்து வருகிறார். அதன்படி திருப்பூர், கடலூர் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த அவர், “அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே சட்டமன்ற தேர்தலில் வெல்ல முடியும்”என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில், இந்திய அணி 6 ஓவர்களில் 74 ரன்கள் குவித்துள்ளது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 40 (20), கில் 34 (16) ரன்களை குவித்து அவுட்டானர்கள். இதைத் தொடர்ந்து தற்போது, கேப்டன் SKY, பண்ட் ஆகியோர் களத்தில் உள்ளனர். IND அணி தற்போதுவரை 6.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் குவித்துள்ளது. IND அணி எத்தனை ரன்கள் இலக்கு நிர்ணயிக்கும்? கமெண்ட்ல சொல்லுங்க

மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு திட்டமிட்டு நடந்ததாக, பாஜக ஐடி விங் தலைவர் அமித் மால்வியா விமர்சித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா பானர்ஜியின் வெளிநடப்பு, கேமராக்களுக்காக திட்டமிடப்பட்ட சம்பவம் என்று சாடிய அவர், முக்கியமான கூட்டத்தில் மம்தா பானர்ஜி அரசியல் நாடகமாடுவது வருந்தத்தக்கது என்றார். வெளிநடப்பு மூலம் மேற்குவங்க மக்களை மம்தா அவமதித்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகளில் படிக்கும் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் மதிப்பீடு வகுப்புகள் தேதியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, 9ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 19, 20, 10ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 20, 21, 11ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 21, 22, 12ஆம் வகுப்பு-ஆகஸ்ட் 22, 23ஆம் தேதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில, இந்த திட்டம் உதவுகிறது.

மும்பை ரயில் நிலைய வளாகத்திற்குள் 91 எலிகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, நிலைய பராமரிப்பு ஒப்பந்ததாரருக்கு, மத்திய ரயில்வே ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் எலி தொல்லை குறித்து பயணிகள் புகார் அளித்து வந்த நிலையில், ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பொருட்கள் வைக்கும் அறைகளில் சோதனை செய்யப்பட்டது. இதில் இறந்த நிலையிலும், உயிருடனும் எலிகள் கண்டெடுக்கப்பட்டன.

புதுச்சேரியில் வரும் தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக நிகழும் என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் புதுச்சேரியில் INDIA கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்ற அவர், காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். அங்கு, என்.ஆர் காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக
இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

TNPL தொடரில் இன்று சேலம் அணிக்கு எதிரான போட்டியில் கோவை த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சேலம் 20 ஓவரில் 171 ரன்கள் எடுத்துள்ளது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை, அடுத்தடுத்து 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் சித்தார்த் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். அந்த அணியில் சிறப்பாக விளையாடிய சஞ்சு 48, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தனர்.
Sorry, no posts matched your criteria.