India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் இருந்து அளிக்கப்படும் ஒரு ரூபாய் வரிப் பகிர்வில், மத்திய அரசு 29 பைசாவை மட்டுமே திருப்பித் தருகிறது. இதனை குறிப்பிடும் விதமாக ‘29 பைசா மோடி’ என்று திமுகவினர் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். மத்திய அரசால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதாகவும், பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அதிகளவு வரிப் பகிர்வு அளிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நாளை முதல் எழுதவுள்ள என்னருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிறந்து 1 மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற தாயை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூரைச் சேர்ந்த சத்யா என்பவருக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை மீது அவரது கணவர் ரமேஷ் அதிக பாசம் காட்டியதால், ஆத்திரமடைந்த சத்யா குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார். மேலும், குறை மாத குறை மாத பிரசவம் என்பதால், எதிர்காலத்தில் குழந்தை ஊனமாகிவிடுமோ என்ற அச்சத்தில் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பெங்களூரு – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று, சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில், பஞ்சாப்- 17, பெங்களூரு- 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. பெங்களூரு அணி சொந்த மண்ணில் வெற்றி பெறுமா? முதல் 2 புள்ளிகளை பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
‘ஆடுஜீவிதம்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் பிருத்விராஜ், ‘மொழி’ படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து நிறையப் படங்களில் நடித்திருக்கிறோம். நான் தயாரித்த ‘9’ படத்தில் அவர் நடித்தார். அதற்காக அவருக்கு செக் கொடுத்த போது, “என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்ப ” என்று சொல்லி தூக்கியெறிந்தார். என்னை எப்போதுமே அவர் வேறு ஒருவனாக பார்க்க மாட்டார்’ என்றார்.
வெள்ளிங்கிரி மலையில் தொடர் உயிரிழப்புகள் ஏற்படுவதால், வனத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இதய நோய், மூச்சு திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள் ஆகியோர் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரம் செய்யவிடாமல் சிபிஐ அதிகாரிகள் தடுப்பதாக மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் அதானி குறித்து கேள்வி எழுப்ப ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மஹுவாவின் MP பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடும் நிலையில், சோதனை என்ற பெயரில் தனது பிரசார முயற்சிகளை சிபிஐ முறியடிப்பதாக தேர்தல் ஆணையத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய வழக்கில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியம் விலகியுள்ளார். அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை நீக்கக் கோரி, எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார்.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை செலவு செய்யும் என்று தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. தேர்தல் பிரசாரத்திற்கு மேடை அமைக்கும் செலவு, வாகன செலவு, நோட்டீஸ் செலவு, உணவு செலவு, தங்குமிட செலவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர தேர்தல் ஆணையம் ₹5,300 கோடி செலவிடவுள்ளது.
▶மார்ச் 26: சென்னை – குஜராத், ▶மார்ச் 31: சென்னை – டெல்லி, ▶ஏப்ரல் 5: சென்னை – ஐதராபாத், ▶ஏப்ரல் 8: சென்னை – கொல்கத்தா, ▶ஏப்ரல் 14: சென்னை – மும்பை, ▶ஏப்ரல் 19: சென்னை – லக்னோ, ▶எப்ரல் 23: சென்னை – லக்னோ, ▶ஏப்ரல் 28: சென்னை – ஐதராபாத், ▶மே 1: சென்னை – பஞ்சாப், ▶மே 5: சென்னை – பஞ்சாப், ▶மே 10: சென்னை – குஜராத், ▶மே 12: சென்னை – ராஜஸ்தான், ▶மே 18: சென்னை – பெங்களூரு
Sorry, no posts matched your criteria.