India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடகொரிய நாட்டில் பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. லிப்-ஸ்டிக் என்பது மேற்கத்திய நாட்டின் தாக்கம் என்றும், சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே அந்நாட்டில் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை உள்ளது.
ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கு 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் RCBக்கு எதிரான போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லாவிட்டால், மற்ற அணிகளின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்படலாம். ஒருவேளை RCBக்கு எதிராக CSK வெற்றி பெற்றாலும், SRH மற்றும் LSG அணிகளின் ரன்-ரேட்டைப் பொறுத்து ப்ளே-ஆஃப் செல்லும் அணிகள் முடிவு செய்யப்படலாம்.
மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையில் கடந்த மாதம் வெளியான ‘விசில் போடு’ பாடல், வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு பயணச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதனை சீரமைக்கும் முடிவில் போக்குவரத்துத் துறை இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர், வட இந்தியாவில் உள்ள பிரச்னைகளும், தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளும் வேறு எனத் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் மக்கினாம்பட்டியில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 செ.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளன. கோவை மாவட்டம் ஆழியார், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், தேனி மாவட்டம் வீரபாண்டி, நீலகிரி மாவட்டம் பார்வுட் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையில் GameStop என்ற பங்கின் விலை நேற்று ஒரே நாளில் 74% உயர்ந்ததால் Short Sellers சுமார் $1 பில்லியன் (₹8000 கோடி) நஷ்டத்தை சந்தித்துள்ளனர். Short Sellers என்றால் பங்கை காலையில் அதிக விலைக்கு விற்றுவிட்டு, மாலையில் குறைந்த விலைக்கு வாங்குவார்கள். ஆனால், எதிர்பாராத விதமாக பங்கின் விலை உயரும்போது அவர்கள் நஷ்டமடைகின்றனர். குறிப்பாக, GameStop மாதிரியான நிகழ்வுகள் அபூர்வமானவை.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை 4 நாள்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹280 குறைந்து ₹53,520க்கும், கிராமுக்கு ₹35 குறைந்து ₹6,690க்கும் விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ₹90.70க்கும், கிலோ வெள்ளி ₹90,700க்கும் விற்பனையாகிறது.
Sorry, no posts matched your criteria.