India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாகக் கூறிய காங்., மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், “ராகுலின் வழிகாட்டியாக இருக்கும் நபரின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளில் உள்ள இனவெறியைப் பாருங்கள். இந்தியர்கள் குறித்து இப்படிப் பேச INDIA கூட்டணி வெட்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக MLA பழனியாண்டி, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி எடுத்ததால் மயக்க நிலைக்குச் சென்ற பழனியாண்டியை, அவரது குடும்பத்தினர் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததுடன், பழனியாண்டியின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பணக்காரர்கள் அதிகம் வாழும் நகரங்கள் பட்டியலில் நியூயார்க் முதலிடம் பிடித்துள்ளது. ஆசிய பசிபிக் நாடுகளில் முதல் 10 இடங்களில், சீனாவின் 5 நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளது. இந்தியாவில், டெல்லி, மும்பை அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் நாடுகளில், டோக்கியோ அதிக மில்லியனர்கள் வாழும் நகரமாக முதலிடத்தில் இருந்து வருகிறது. ஹென்லி & பார்ட்னர்ஸ் வெளியிட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
தோல்வி பயத்தில் பிரதமர் மோடி, தனது நண்பர்களான அம்பானி, அதானியை விமர்சிக்க தொடங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். பிரதமர் நாற்காலி விரைவில் பறிபோகப் போகிறது என்பதை உணர்ந்துள்ள மோடி, அதானி, அம்பானிகளை காங்கிரஸுடன் இணைத்து பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முன்னதாக, பரப்புரையில் பேசிய மோடி, இப்போதெல்லாம் ராகுல் ஏன் அம்பானி, அதானிகளை பற்றி பேசுவதில்லை என விமர்சித்திருந்தார்.
கேரளாவை சேர்ந்த ராதாமணி அம்மாள் (71) என்பவர், 11 வகையான வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸ் வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக 1981இல் 4 சக்கர வாகன லைசென்ஸ் பெற்றதாக தெரிவித்த அவர், படிப்படியாக கிரேன், ஜேசிபி, அதி கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசென்களை பெற்றதாக கூறினார். இளையோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் அவர், கேரளாவில் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார்.
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in என்ற இணையதள முகவரியில் முடிவுகளை அறியலாம். இதுமட்டுமின்றி, பள்ளி சார்பில் மாணவர்களுக்கு SMS வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி (1,493 அடி) இந்தியாவின் உயரமான நீர் வீழ்ச்சியாக உள்ளது. இது ஆசியாவில் 2ஆவது உயரமான நீர் வீழ்ச்சியாகும். இது ஷிமோகா மாவட்டத்தில், அகும்பே அருகே வாராஹி ஆற்றில் அமைந்துள்ளது. ஒடிசாவில் உள்ள பரேஹிபானி நீர்வீழ்ச்சி (1,309), மேகாலயாவில் நோஹ்கலிகாய் (1,115) அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. தமிழ்நாட்டில், பழனியில் உள்ள எலி வால் நீர் வீழ்ச்சியே (975) மிக உயரமானது.
*மாலை நேர உடற்பயிற்சி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும். *நம் உடலில் உள்ள அழுத்தம் குறைந்து, இரவில் நிம்மதியான தூக்கம் வரும். *அலுவகத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் தடைகளின் இறுக்கத்தை சரி செய்யும். *மாலையில் உடற்பயிற்சி செய்தால் அடிவயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு கரையத் தொடங்கும். *மாலை நேரத்தில் பொறுப்புகள் பெரும்பாலும் முடிந்திருக்கும் என்பதால், நிம்மதியான பயிற்சியில் ஈடுபடலாம்.
நடப்பு கல்வியாண்டு முதல், வேளாண் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.யில் நடத்தப்படும் வேளாண் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://tnagfi.ucanapply.com இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பொது ₹600, SC, ST ₹300 கட்டணம். விவரங்களுக்கு 94886 35077, 94864 25076, 04365 – 256430 என்ற எண்களில் அழைக்கவும்.
கெஜ்ரிவால் ஜாமின் மனு மீது மே 10இல் தீர்ப்பளிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான கெஜ்ரிவால், இடைக்கால ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேற்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் தரக்கூடாது என ED கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
Sorry, no posts matched your criteria.