India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் 193 ரன்கள் இலக்கை பஞ்சாப் அணி துரத்தி வருகிறது. இந்த நிலையில், MI பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் PK வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாம் கரன் 6, பிராப்சிம்ரன் 0, ரோஸ்ஸோ 1, லிவிங்ஸ்டன் 1 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். MI தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா மற்றும் கோட்ஸி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில எந்த அணி வெல்லும்?
பின்னோக்கி நடக்கும் ரெட்ரோ வாக்கிங்கில் நமது உடலானது முற்றிலும் வேறு மாதிரியாக தயார்படுத்திக் கொள்ளும். பின்னோக்கி நடக்கும் போது மூட்டு இணைப்பில் ஏற்படும் தாக்கம் குறைவு. புதிய செயல்முறையால் மூளை அலர்ட் ஆகும் என்பதால், பார்க்கின்சன் பாதிப்பு, பக்கவாத பாதிப்பு இருப்பவர்கள் பின்னோக்கி நடக்கலாம். இடுப்பு, முதுகு, மூட்டு, மூளை தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் மட்டும் மருத்துவர்களை ஆலோசிப்பது அவசியம்.
நெஸ்லே நிறுவனம், ஏழை நாடுகளில் விற்பனை செய்யும் பால் பொருள்கள் உள்பட குழந்தைகளுக்கான உணவில் அதிகச் சர்க்கரையைச் சேர்ப்பதாக ஆய்வறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியாவில் செர்லாக் என்ற குழந்தைகளுக்கான உணவில் ஒரு கப்பில் 3 கிராம் சர்க்கரை சேர்க்கப்படுவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், புகாரை விசாரிக்க FSSAI-க்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
வாக்குப்பதிவு நாளான நாளை (19.04.2024) தமிழகத்தின் வெப்பநிலை இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 42 டிகிரி வரை இருக்கக்கூடும். காற்றின் ஈரப்பதம் உள் மாவட்டங்களில் 75 சதவீதமும் கடலோர மாவட்டங்களில் 85 சதவீதமும் இருக்கும் என்பதால் நாளைய தினம் மிகுந்த வெப்பமானதாகவே இருக்கும்.
அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதி நடப்பதாக டெல்லி அமைச்சர் அதிஷி குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதாக, கோர்ட்டில் இன்று ED அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த அதிஷி, நீரிழிவு நோயாளியான அவர், மருத்துவர்கள் அறிவுரைப்படி இனிப்புகளை சாப்பிடுவதாகக் கூறினார். மேலும், தேர்தலில் வெல்ல முடியாவிட்டால் சிறையிலேயே அவரைக் கொல்ல பாஜக முயற்சிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 192/7 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் 78, ரோஹித் ஷர்மா 36, திலக் வர்மா 34 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் சார்பில் ஹர்ஷல் படேல் 3, சாம் கரண் 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த அணி வெற்றிபெறும் என கமெண்ட் பண்ணுங்க.
மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை(19.04.2024) நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல, புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு, மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. விளவங்கோடு தொகுதிக்கும் நாளைய தினம் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் வீடு திரும்பினார். மருத்துவர்களின் ஆலோசனையை மீறி அவர் தன்னைத் தானே டிஸ்சார்ஜ் செய்து கொண்டார். நேற்று காலை அவர் போட்டியிடும் வேலூர் தொகுதியில் பரப்புரை செய்து கொண்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டது. குடியாத்தத்தில் முதலுதவி வழங்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டிருந்தார்.
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், நீங்கள் வாக்களிக்கும் முன் உங்களது வாக்கை வேறு யாரவது செலுத்தியிருந்தால் கவலை வேண்டாம். நீங்கள் நிச்சயமாக வாக்களிக்க முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, பின்னர் அதற்குரிய (Tendered Ballot Paper) வாக்குச் சீட்டில் வாக்களிக்கலாம். உங்கள் வாக்கு தனி உறையில் வைக்கப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
நடிகர் சூர்யா – ஜோதிகா இருவரும் 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக இவர்கள் 2006ஆம் ஆண்டு வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தற்போது ‘சில்லு கருப்பட்டி’ படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.