India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு செலுத்துவதற்காக ரஷ்யாவில் நடைபெறும் படப்பிடிப்பில் இருந்து இன்று சென்னை வந்தார் விஜய். அப்போது அவரது கையில் Band-aid அணிந்திருந்தார். இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ரஷ்யாவில் GOAT படப்பிடிப்பின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அப்போது அவருக்கு சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால்தான் அவர் ப்ளாஸ்திரியுடன் வந்து வாக்கு செலுத்தினார்.
வாக்களிக்கச் சென்ற முதியவரிடம், அவர் இறந்துவிட்டதாக ஆவணத்தில் இருப்பதாக தேர்தல் அலுவலர் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி சிந்தாமணி நகரைச் சேர்ந்த மருதப்பன், புதுக்கிராமத்தில் உள்ள 192ஆவது வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்கு செலுத்த முடியாது என தேர்தல் அலுவலர் கூறியதைக் கேட்டு அதிர்ந்த அவர், பூத் சிலிப்புடன் வந்த நான் என்ன பேயா? எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை வேங்கை வயல் மற்றும் இறையூரைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் வாக்களிக்க குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் திக்குமுக்காடி போயினர். குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காலையில் தேர்தலை புறக்கணித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாலையில் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
ஐபிஎல்லில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்றுள்ள லக்னோ கேப்டன் KL ராகுல் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் சிஎஸ்கே அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் CSK புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்திலும், 3 வெற்றி 3 தோல்வியுடன் LSG 5 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் சுட்டெரித்து வருகிறது. அந்த வகையில், இன்று மட்டும் 9 இடங்களில் வெயில் 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியுள்ளது. இதில், ஈரோடு – 43 டிகிரி செல்சியஸ் (dC), வேலூர் – 41.9 dC, கரூர் பரமத்தி – 41.5 dC, திருச்சி – 41.3 dC, சேலம், திருத்தணியில் தலா 41.2 dC, மதுரை, தருமபுரியில் 41 dC, திருப்பத்தூரில் – 40.4 dC வெயில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் ஏப்ரல் 26 இல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏ இருவர் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். பாஜகவை சேர்ந்த மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினர். இதையடுத்து முதல்வர் சித்தராமையா, து.முதல்வர் DK சிவகுமார் முன்னிலையில் காங்கிரசில் இணைந்த அவர்களுக்கு காங்., தலைவர் கார்கே வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றிருக்கும் நிலையில் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும் பெட்டிகள், அந்தந்த தொகுதிகளில் உள்ள ஸ்ட்ராங் ரூம்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. இனி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்றுதான் சீல் உடைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும்.
‘படையப்பா’ படத்தில் “ஓஹோ ஓஹோ கிக்கு ஏறுதே…” என்ற பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் பாடலில் “கம்பங்களி திண்ணவனும் மண்ணுக்குள்ள, தங்க பஸ்பம் திண்ணவனும் மண்ணுக்குள்ள..” என்ற வரி வரும். இதை நோட் செய்த ரஜினி, எம்ஜிஆர்தான் தங்க பஸ்பம் சாப்பிட்டதாக சொல்வார்கள். அதனால், இந்த வரி வேண்டாம் என சொல்லியிருக்கிறார். ஆனால், சர்ச்சை வராது எனக் கூறி ரஜினியை வைரமுத்து சமாதானம் செய்துள்ளார்.
தேர்தலை புறக்கணிப்பது தேவையில்லாத செயல் எனக் கூறியுள்ள அதிமுக MP தம்பிதுரை, மக்கள் நோட்டா சின்னத்திலாவது வாக்களிக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்களித்த பின் பேசிய அவர், காங்கிரஸுடன் திமுக கூட்டணியில் இருந்தாலும், பாஜகவுடன் கள்ள உறவில் திமுக இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், வெயில் காரணமாக வாக்குப் பதிவு சற்று மந்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்களிக்கும் நேரம் 6 மணியுடன் நிறைவடைந்திருப்பதால் வரிசையில் கத்திருப்போருக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதலே ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள், வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களித்தனர். இனி, 6 மணிக்கு மேல் டோக்கன் வைத்திருப்போருக்கு மட்டும் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.