India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயில் தமிழகம் முழுவதும் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது, இன்று காலை சென்னை உள்ள இடங்களில் மழை பொழிந்த நிலையில், தற்போது மேற்கு மற்றும் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கொடைக்கானல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ரோஷமான நாய்களை வளர்க்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போது வளர்ப்பு பிராணியாக உள்ள பிட்புல் டெரியர், தோசா இப்னு, அமெரிக்கன் புல் டாக், ராட்வீலர்ஸ் உள்ளிட்ட 23 வகை நாய் வகைகளை வைத்திருப்போர் உடனடியாக அவற்றுக்கு கட்டாயம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லையென்றால், பொதுமக்கள் பாதுகாப்பைக் கருதி பறிமுதல் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் மீது, ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக முதல்வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டு ஆளுநர் மாளிகை ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் 100 பேரை அழைத்து, ஏப் 24 முதல் மே 2 வரை ஆளுநர் மாளிகையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆளுநர் திரையிட்டு காட்டினார்.
வெயில் வாட்டி வதைத்து வருவதால் உற்பத்தி குறைந்து வரத்து சரிந்ததால், தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200ஆக உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் விலை கிலோ ரூ.80 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது. கொத்தவரங்காய், முட்டைக் கோஸ் உள்ளிட்டவற்றின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றத்தை கண்டு இல்லதரசிகள் கவலையடைந்துள்ளனர்.
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பரப்புரை என்பது ஒருவருக்கு அடிப்படை உரிமை அல்ல என ED கூறியுள்ளது. மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமின் மனு மீது, உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ள நிலையில், ஜாமின் வழங்க ED கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
‘கையெத்தும் தூரத்து’ படம் தோல்வியடைந்தபோது, திரைத்துறையில் என்னை நிரூபித்துக் காட்ட வேண்டுமென்ற வேட்கை தனக்கு ஏற்பட்டதாக ஃபகத் ஃபாசில் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், என் அப்பா இயக்குநர் ஃபாசிலின் பெயரைக் காப்பாற்ற கடும் உழைப்பைச் செலுத்தத் தொடங்கினேன். இப்போது என் நடிப்பை மக்கள் கொண்டாடுவது ஆச்சரியத்தையும், மனமகிழ்வையும் அளிக்கிறது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு வழக்கை மே 22க்கு ஒத்திவைத்துள்ளது. அவசர காலங்களில், இந்த தடை தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். தமிழக அரசு வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மே 2 முதல் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போதிய நீரின்றி கரூர் மாவட்டத்தில் 1,000 ஏக்கர் வெற்றிலை கொடி கருகி வருகின்றன. தமிழகத்தில் வெற்றிலை அதிக சாகுபடி செய்யும் மாவட்டங்களில் கரூர் ஒன்று. அங்கு விளைவிக்கப்படும் வெற்றிலை, பல இடங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அண்மைக் காலமாக தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பாசனத்துக்கு போதிய நீரை செலுத்த முடியவில்லை. இதனால் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட வெற்றிலை பயிர்கள் கருகியுள்ளன.
அக்னி நட்சத்திர காலத்தில் திருமணத்துக்கு வரன் தேடுவது, நிச்சயதார்த்தம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகளை செய்யலாம். வளைகாப்பு தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை. வீடு மாற நினைத்தால் வாடகை வீட்டிற்கு தாராளமாக மாறலாம். தொழில் தொடர்பான கட்டுமானப் பணிகளை தொடங்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும் மொட்டை அடித்து காது குத்தக் கூடாது. அக்னி நட்சத்திர காலத்தில் சொந்த வீட்டிற்கு குடிபோக கூடாது.
புதிய கதைக்களத்துடன் வரும் படைப்புகள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை தனக்கு அதிகரித்துள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், “மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு போன்ற மலையாளப் படங்களின் கதை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ‘சச்சின்’ படத்தை ரீரிலீஸ் செய்ய இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.