India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி பல்வேறு புதிய வசதிகளைச் சோதித்து வருகிறது. அந்த வகையில், இணைய வசதி இல்லாமல் படங்கள், வீடியோக்கள், ஆவணங்களைப் பகிரும் வசதியை வாட்ஸ் அப் சோதித்து வருகிறது. ப்ளூடுத்தைப் பயன்படுத்தி உருவாகி வரும் இந்தப் புதிய வசதி விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகிறது. இந்த வசதியை செல்போனில் மட்டுமின்றிக் கணினிகளிலும் பயன்படுத்த முடியும்.
சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் அதிரடியாக ஆடிவரும் LSG வீரர் ஸ்டாய்னிஸ் அரை சதம் கடந்துள்ளார். 41 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3சிக்ஸர்களுடன் 76* ரன்கள் விளாசியுள்ளார். இவரது அதிரடியால் தற்போது வரை LSG அணி 13 வர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. CSK தரப்பில் சாஹர், முஸ்தஃபிசுர், பதீரனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தமிழ் ஆண்டின் முதல் மாதத்தில் வரும் சித்ரா பெளர்ணமி, புதிய தொடக்கங்களுக்குச் சிறந்த நாள். இந்த நாளில் சித்ர குப்தனை வழிபட்டால் நமது பாவக் கணக்கைப் புண்ணியக் கணக்காக மாற்றுவார் என்பது ஐதீகம். மேலும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஞானம் பெறவும் முடியும். அந்த வகையில், இந்தப் பௌர்ணமி நாளில் இருந்து அனைத்து ராசிக்காரர்களும் அவரவர் நட்சத்திர அடிப்படையில் நற்பயன்களை அனுபவிக்க உள்ளனர்.
பிரதமர் மோடி மதம் சார்ந்த அரசியல் செய்பவர் இல்லை, மதங்களுக்கு மரியாதை கொடுப்பவர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பல ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சிதான் இந்து, முஸ்லீம் பிரச்னையை ஏற்படுத்தி அரசியல் செய்தது. ஆனால், பாஜக மக்களுக்குப் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி நாட்டை உயர்த்தும் முனைப்பில் உள்ளது என்றார்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அனைவருக்கும், இடம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேத் துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ரயில்வேத் துறையின் தரம் அடுத்த 5 ஆண்டுகளில் உயர்த்தப்படும் என்றார். இது பிரதமர் மோடியின் உத்தரவாதம் எனவும் அவர் தெரிவித்தார்.
வாணியம்பாடி அருகே வளர்ப்பு நாயைக் குளிப்பாட்டச் சென்ற அக்கா-தம்பியும், திருப்பூர் வெள்ளக்கோவிலில் கிணற்றில் குளித்த 8 வயதுச் சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோடை விடுமுறைக் காலத்தில், குழந்தைகள் நீர் நிலைகளுக்கு விளையாடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதனால், பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அடிக்கடி எதையாவது ட்ரெண்ட் செய்வது வழக்கம். அந்தவகையில் இன்று காலை முதல் இந்தியா முழுக்க அனைவரும் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதாவது உங்கள் கீ போர்டில் Hக்கும் Lக்கும் இடையே இருப்பதைப் பாருங்கள் என்பதுதான் அது. வேறு ஒன்றுமில்லை Hக்கும் Lக்கும் இடையே இருப்பது JK. ‘Just Kidding’ என்பதைத்தான் இவ்வாறு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
ஆன்லைன் படிப்பு தொடர்பாகப் போலிகளிடம் இருந்து மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலை., மானியக் குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் கல்வி தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி மையங்களின் விவரங்களை deb.ugc.ac.in என்ற இணையத்தளத்தில் அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய மனு நாளை தள்ளுபடியாகவே வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணுவது வாக்குச் சீட்டுகளை எண்ணுவதற்கு ஒப்பானது. சுமார் 96 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில், அனைத்து ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி முடிவுகளை அறிவிக்க 15 நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் எனக் கூறிய ப.சிதம்பரத்தின் எண்ணம் பலிக்காது என்று அமித் ஷா கூறியுள்ளார். கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், சிஏஏ திருத்தச் சட்டம் வேண்டாம் எனக்கூறும் சிதம்பரம், சிஏஏ சட்டத்தின் குறைபாடுகளைக் கூறவே இல்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை வலுப்படுத்தவே காங்கிரஸ் கட்சியினர் இவ்வாறு பேசி வருவதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.