India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகருக்கு முதல் பூஜை செய்யப்படும் நிலையில், சென்னிமலை முருகன் கோயிலில் மூலவர் முருகனுக்கு நைவேத்ய பூஜை முடிந்த பின்பே, சந்நிதி விநாயகருக்கு பூஜை செய்யப்படும். 2 திருமுகங்கள், 8 திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தரும் சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. இந்த கோயிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும். முருகனுக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்றும் நம்பப்படுகிறது.
சிங்கப்பூரின் புதிய பிரதமராக பொருளாதார அறிஞர் ‘லாரன்ஸ் வாங்’ பதவியேற்றுக் கொண்டார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூரை வளர்ச்சிப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் PAP (Peoples Action Party) கட்சியைச் சேர்ந்தவர்தான் இவரும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரதமராக இருந்த ‘லீ லூங்’ பதவி விலகிய நிலையில் வாங் பிரதமராகியிருக்கிறார். இவரே நிதியமைச்சராகவும் செயல்பட இருக்கிறார்.
தமிழகத்தில் பகல் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளச்சேரி, கிண்டி, சோழிங்கநல்லூர், சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், நந்தனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அரியலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்கிறது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
ஒரே மாதிரியாக நடிப்பது போரடித்துவிடும் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதாக கூறிய அவர், ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக்கமே தனக்கு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்தார். எல்லா படங்களுமே நல்ல கதாபாத்திரங்களை கொடுக்க வாய்ப்பில்லை என்றாலும், அதை தேடி பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரம் உறங்குவதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதால், மூளை நரம்புகள் சீராகச் செயல்படும். இதனால், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறையும். அந்நாளை சிறப்பாக திட்டமிட அதிக நேரம் கிடைக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் ஒதுக்க முடியும்.
முருகனின் ஐந்தாம் படை வீடு திருத்தணி. சூரபத்மனை வதம் செய்த பிறகும் கோபம் தணியாத முருகப்பெருமான் திருத்தணிக்கு சென்று தன் கோபத்தைத் தணித்துக் கொண்டதாக ஐதிகம். மேலும், இங்குதான் பிள்ளையாரின் உதவியுடன் வேடர் குலத்தில் பிறந்த வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்டார். திருத்தணி முருகனை வழிபட்டால், தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது. வாழ்க்கையில் தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.
சென்னை அருகே நடந்த விபத்தில் நேற்று 9 பேர், இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு மற்றும் அதிகாலையில் நிகழும் விபத்து அதிகரித்துள்ளன. அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்தி விபத்தை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், ஓட்டுநர்களும் வாகனங்களை எச்ச்சரிக்கையாக இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன. ஹைதராபாத் இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய போட்டியில் வென்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். குஜராத் 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு முடிவில்லை என 11 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.