India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 51ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிசிசிஐ போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ‘மாஸ்டர் ஆஃப் பிளாஸ்டர்’ எனப் போற்றப்படும் சச்சின், பந்து வீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். பேட்ஸ்மேன்களுக்கு ஊக்குவிப்பாளராகவும், ரசிகர்களுக்கு உற்சாகமளிப்பவராகவும் திகழ்ந்து, 24 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை கட்டியாண்டவர் என அவரை சொன்னால் அது மிகையல்ல.
வட தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 -5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே, கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்பநிலை மேலும் உயர உள்ளது. அதிக வெப்பநிலை, அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது அசெளகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், மதிய நேரத்தில் கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்க்கவும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி பாஜகவுக்கு நன்கொடைகளைப் பெற்ற மோடி ஊழலை ஒழிப்பாரா என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் பேசிய அவர், ₹150 கோடி லாபத்தை அடையாத நிறுவனம் ₹1,100 கோடி நன்கொடை வழங்குகிறது. இடி, ஐடி மூலம் மிரட்டிப் பெற்ற இந்தத் தொகை குறித்து பதில் சொல்லாமல் கவனத்தை திசை திருப்புகிறார். அவர்தான் மிகப்பெரிய ஊழல்வாதி என விமர்சித்துள்ளார்.
ராஜ்நாத் சிங் போன்ற அரசியல்வாதி பொய் பேசுவது ஏமாற்றம் அளிப்பதாக காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். காங்., தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை இருப்பதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். காங்., அறிக்கையின் எந்தப் பக்கத்தில் அதைப் படித்தீர்கள் எனக் கேள்வி எழுப்பியதுடன், ஒருவேளை கண்ணுக்குத் தெரியாத மையினால் பேய் எழுதிய அறிக்கையை படித்திருப்பாரோ என கிண்டலாகக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மின் தேவையும் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு நேற்று ஒரே நாளில் புதிய உச்சமாக 5,365 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், நேற்று புதிய உச்சமாக 40.50 MU சூரிய மின்சாரம் பயன்படுத்தப்பட்டதாகவும், இது மார்ச் 13இல் பதிவான 39.90 MU என்ற முந்தைய சாதனையை முறியடித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். எனினும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. மறுபுறம், சில தனியார் பள்ளிகள் ஆர்டிஇ குறித்த சந்தேகங்களுக்கு முறையாக பதில் அளிப்பதில்லை என பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது. இதனால், 2022 – 23 கல்வியாண்டில் 95,946 ஆக இருந்த ஆர்டிஇ மாணவர்கள் சேர்க்கை, கடந்த ஆண்டு 70,553 ஆக குறைந்துள்ளது.
EVM, விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்கக் கோரிய வழக்கில், நீதிபதிகளின் சந்தேகங்களுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளித்தது. தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கப்பெற்றதாக கூறி நீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
கேரளாவில் அண்ணாமலையை வரவேற்று வைத்த பேனர்களை போலீஸார் அகற்றியதற்கு பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கடந்த சில நாள்களாக அண்ணாமலை பரப்புரை செய்து வருகிறார். வயநாடு பாஜக வேட்பாளர் கே.சுரேந்திரனை ஆதரித்து இன்று அவர் பரப்புரை செய்த நிலையில், அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அனுமதி இல்லாததால் அந்த பேனர்களை போலீசார் அகற்றினர்.
மேற்கு திரிபுராவில் உள்ள 4 பகுதிகளில் ஏறத்தாழ 100%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியிருப்பதாக சிபிஎம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து பேசிய திரிபுரா சிபிஎம் செயலாளர் ஜிதேந்திர சௌத்ரி, மஜ்லிஷ்பூரில் (44வது பகுதி) 105%, மோகன்பூரில் (38வது பகுதி) 109% என கூடுதல் சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது. முறைகேடு செய்தால் மட்டுமே இதுபோன்ற பொருந்தாத வாக்குச் சதவீதம் நிகழும் என்றார்.
மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 100 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோழிக் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலையால் காற்று, நீர் மாசுபடுவதாகக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதிகளுக்கு உட்பட்டே ஆலை செயல்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தும் போராட்டத்தை கைவிடவில்லை. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.