India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சென்னை திரும்பினார். கனடாவில் இருந்து விமான மூலம் சென்னை வந்த அவருக்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் ஊக்கம் தனக்கு உறுதுணையாக இருந்தது. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன் போட்டியில், நிச்சயம் வெல்வேன் எனத் தெரிவித்தார்.
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைப் போக்க சந்தன பானகத்தைப் பருகலாமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. சந்தன பானகத்தை செய்வது எப்படி என பார்க்கலாம். முதல் நாள் இரவு மண்பானைத் தண்ணீரில் ஊறவைத்த செஞ்சந்தனத்துடன் பனை வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்தால் பானகம் ரெடி. இப்பானகத்தைக் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் நீங்குமாம்.
2008 பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்காக சோனியா காந்தி அழுததாக ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளார். பீகார் பிரசாரக் கூட்டத்தில் பேசிய நட்டா, கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்காக சோனியா கண்ணீர் விட்டார் என காங்கிரஸ் தலைவர்களே கூறியதாகத் தெரிவித்தார். தீவிரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார், இதன் பின்னணி என்ன என்றும் அவர் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.
உ.பி., மாநிலம் ஹத்ராஸின் பாஜக எம்பி ராஜ்வீர் திலர் (65) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவிற்குப் பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 2019இல் ஹத்ராஸ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவருக்கு 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக சீட் கொடுக்க மறுத்துவிட்டது. அவருக்கு பதில், அனூப் பால்மிகி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதன்படி 6,244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி, 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ தேர்வு செப்.28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி, 29 பணியிடங்களுக்கான குரூப் 1 பி, குரூப் 1 சி தேர்வுகள் ஜூலை 12ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள PVR-INOX திரையரங்குகளில், இனிமேல் விளம்பரங்கள் திரையிடப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட இடைவேளையின் போது விளம்பரங்கள் இருக்காது. படங்களின் டிரைலர்கள் மட்டுமே திரையிடப்படும். படம் தொடங்குவதற்கு முன்பு திரையிடப்படும் விளம்பர நேரத்தை, 10 நிமிடங்களாகக் குறைப்பதன் மூலம் கூடுதல் காட்சிகளைத் திரையிட்டு விளம்பர வருவாய் இழப்பை ஈடுகட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டு காலம் மத்தியில் தான்தோன்றித்தனமான ஒரு கொடுங்கோல் ஆட்சி நடந்தது என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர்,
பிரதமர் மோடிக்கு இன்னும் 5 ஆண்டுகள் நாட்டை ஆளும் வாய்ப்பைக் கொடுத்தால் சவக்குழி தோண்டி, நம்மைப் புதைத்து மூடிவிட்டுப் போய்விடுவார். மதத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தவர்கள் மக்களைப் பற்றி எப்படிச் சிந்திப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் உள்ள கடன் அட்டைகளின் (கிரெடிட் கார்டு) எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2023 மார்ச் மாதம் நாட்டு மக்களிடம் இருந்த கடன் அட்டைகள் எண்ணிக்கை 8.5 கோடியாக இருந்தது. இது 2024 பிப்ரவரி மாதம் 10 கோடியாக அதிகரித்தது. இந்நிலையில் 2024 மார்ச்சில் அந்த எண்ணிக்கை 10.2 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் எச்டிஎப்சி 20%, எஸ்பிஐ 18.5%, ஐசிஐசிஐ 16.6% பங்களிப்பு செய்கின்றன.
மனைவியின் சொத்து மீது கணவருக்கு உரிமை கிடையாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரள பெண் ஒருவர், முன்னாள் கணவரிடம் இருக்கும் தனது ஆபரணங்களைத் திருப்பி அளிக்கக்கோரி தொடுத்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனைவியின் சொத்து 2 பேரின் கூட்டு சொத்து கிடையாது என்றும், பிரச்னையான நேரத்தில் பயன்படுத்தலாம், ஆனால் திருப்பியளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
லலிதாம்பிகையின் ஆபரணத்திலிருந்து கலை & ஞானத்தின் குழந்தை வடிவமாக அவதரித்தவள் மனோன்மணி ஸ்ரீபாலாம்பிகை. சாக்த வழிபாட்டில் வாலையாக போற்றப்படும் இவருக்கு வெள்ளிக்கிழமைகளில் மல்லிகை மலர்கள் சமர்ப்பித்து, கற்கண்டு சாதம் நைவேத்தியம் செய்து வழிபட திடீர் பண வரவால், தீராத கடன் பிரச்னைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றும் வாழ்க்கையில் நல்வழி பிறக்கும் என்றும் நம்பிக்கை நிலவுகிறது.
Sorry, no posts matched your criteria.