India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய பயிற்சிப் போட்டியில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. பயிற்சிப் போட்டிகள் முடிந்தபின் நாளை முதல் லீக் போட்டிகள் தொடங்குகிறது.
எதிர்க்கட்சிகள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளதாக அமித்ஷா கூறியுள்ளார். இதன் காரணமாகவே காங்., தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கலந்துகொள்ளாமல் ஓடுவதாக அவர் விமர்சித்துள்ளார். இது குறித்து X தளத்தில், காங்., தோல்வியை சந்திக்க உள்ளது அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்துள்ளது. இதனால்தான் மக்களையும், ஊடகத்தையும் சந்திக்க தைரியமின்றி அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள் என பதிவிட்டுள்ளார்.
* விரக்தி என்ற மலையிலிருந்து நம்பிக்கை என்ற கல்லை நாம் வெட்டியெடுக்க முடியும்.
* ஒரு எதிரியை நண்பனாக மாற்றக்கூடிய ஒரே சக்தி அன்பு மட்டுமே.
* நாங்கள் நினைவில் வைத்திருப்பது எங்கள் எதிரிகளின் வார்த்தைகளை அல்ல, எங்கள் நண்பர்களின் மெளனத்தை தான்.
* நாம் வரையறுக்கப்பட்ட ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ளலாம்; ஆனால், நம்பிக்கையை ஒருபோதும் இழந்துவிடக்கூடாது. – மார்ட்டின் லூதர் கிங்
பெண் கடத்தல் சம்பவம் தொடர்பான வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி பவானிக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் அவரும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
2007 முதல் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிவரும் வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் விரைவில் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது. இது குறித்துப் பேசியுள்ள அவர், கிரிக்கெட்டில் அறிமுகமானதில் இருந்து இவ்வளவு காலம் விளையாடுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னால் அடுத்த டி20 உலகக் கோப்பையிலும் விளையாட முடியும் என்றார். ஆனால், அதற்கு முன்பாக எனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.
➤ உலக பால் தினம்
➤ உலகப் பெற்றோர் நாள்
➤1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
➤1968 – அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர் நினைவு தினம்.
➤1946 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ருமேனியாவின் பிரதமராக இருந்த இயன் அந்தனேஸ்கு தூக்கிலிடப்பட்டார்.
➤1971 – தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எனப்படுகிறது. இதில் NDA கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட நிலையில், INDIA கூட்டணி பிரதமர் வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், INDIA கூட்டணியில் இருந்து ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதே தனது விருப்பம் என காங்., தலைவர் கார்கே கூறியுள்ளார்.
ராஞ்சனா, ஷமிதாப், அத்ராங்கி ரே படங்களையடுத்து நடிகர் தனுஷ் பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெயின்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானபின், இன்றுவரை படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல் ▶அதிகாரம்: வான்சிறப்பு ▶ எண்: 20 ▶குறள்: நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. ▶பொருள்: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியை அவ்வளவு எளிதாக நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். லீக் போட்டிகளில் விளையாடும் முன்பாக மைதானத்தின் தன்மை மற்றும் வானிலையைத் தெரிந்துகொள்வதற்கு இந்தப் போட்டி உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.