India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக அரசின் கால்களில் திமுக அரசு அடமானம் வைத்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “டெல்லியில் நடைபெறும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களில் ஆன்லைனில் பங்கேற்க தமிழக அரசு முடிவு எடுத்தது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகள் நேரில் தான் பங்கேற்றாக வேண்டும்” என வலியுறுத்தினார்.
நானும் G.V.பிரகாஷும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காகவே விவாகரத்து செய்கிறோம் என பாடகி சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தங்களது இந்த முடிவு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகும் கட்டுக் கதைகள் வேதனை தருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், யூகங்கள் மூலம் ஒருவரின் குணாதிசயத்தை சிதைப்பதை ஏற்க முடியாது எனக் கூறியுள்ளார். G.V.பிரகாஷ்-சைந்தவி தம்பதி பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.
உண்மைக்கு மாறான பல செய்திகளை இட்டுக்கட்டி விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த பாஜக அரசு கவலைப்படவில்லை. சிங்கள இனவெறி அரசை திருப்திப்படுத்த புலிகள் மீதான தடையை நீட்டித்திருக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக தற்போது பதவி வகிக்கும் டிராவிட்டுக்கு பதில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய பிசிசிஐ விளம்பரம் வெளியிட்டுள்ளது. இதனால் அவருக்கு அடுத்து யார் அந்த பதவிக்கு வருவார்கள் என மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவரான விவிஎஸ் லட்சுமண் பெயரும் அடிபட்டது. ஆனால், அதை லக்ஷ்மன் விரும்பவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.
41 வகையான மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளதாக தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம்(NPPA) தெரிவித்துள்ளது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில், சர்க்கரை நோய், இதயம், கல்லீரல் பிரச்னை போன்ற நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை குறைத்துள்ளதாகவும், இந்தத் தகவலை டீலர்கள், ஸ்டாக்கிஸ்டுகளுக்கு மருந்து நிறுவனங்கள் தெரியப்படுத்தவும், NPPA உத்தரவிட்டுள்ளது.
RR அணிக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் ரசிகர்களுக்கு, தோனி கையெழுத்திட்ட பந்தை பரிசாக வழங்கியது CSK அணி. தற்போது ரசிகர்களுக்கு மேலும் ஒரு கிஃப்ட் வழங்க உள்ளதாக CSK அறிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ரசிகர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்தால், ரசிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு CSK வீரர்களின் கையெழுத்துடன் கூடிய புகைப்படம் பரிசளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. <
அதிக லாபம் ஈட்ட பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வோர், முறையான முதலீட்டுத் திட்டங்களை (SIP) தேர்வு செய்யலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். Stepup SIP எனப்படும் இந்த முறையில் மாதத்திற்கு ₹5,400 என்ற விகிதத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ₹49.67 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதை ஆண்டுக்கு 5% உயர்த்தினால் ₹69 லட்சமும், 15%க்கு ₹1.54 கோடியும் கிடைக்கும் என கூறுகின்றனர்.
P.F. கணக்கிலுள்ள பணத்தை அவசரத் தேவைக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தும், நேரடியாக மனு அளித்தும் முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவுத் தொகையோ எடுக்கலாம். முழு பணத்தையும் எடுக்க விண்ணப்ப படிவம் 19, பகுதியளவு எடுக்க விண்ணப்ப படிவம் 31ஐ அளிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க UAN எண், P.F.இல் பதிவு செய்த மொபைல் எண் அவசியமாகும். மருத்துவம், 2 மாதத்துக்கு மேல் பணியில் இல்லாதோர் முழு பணமும் எடுக்கலாம்.
சிறைக்கு சென்றபின் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனக் குழப்பத்தில் இருப்பதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், துடைப்பத்தை (ஆம் ஆத்மி சின்னம்) கையில் எடுத்த கெஜ்ரிவால் அதை வைத்து அன்னா ஹசாரேவின் கனவை துடைத்து விட்டார் என விமர்சித்துள்ளார். மேலும், மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கில் அவர் சிறைக்கு சென்ற பின் டெல்லி மக்கள் நிம்மதியாக இருந்தனர் என்றார்.
*உப்பை (2300 மி.கி.,) அளவாக எடுத்துக்கொள்வது, இதயநோய்களை கணிசமான அளவில் குறைக்கும். *அதிகம் பதப்படுத்தப்பட்ட & கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். *ஒரு கிலோ கிராம் எடைக்கு 1.6 கிராம் புரதம் சாப்பிடலாம். *சிறு தானியங்களில் இருந்து கிடைக்கும் கார்போஹைட்ரேட்ஸ் உடலுக்கு நல்லது. *சுறுசுறுப்பாக இருக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். *பருவகால பழங்கள் & காய்கறிகளை தவிர்க்காமல் உண்ண வேண்டும்.
Sorry, no posts matched your criteria.