India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
▶விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கலையரசன், சாண்டி, அபிராமி, கௌரி, ஜனனி, ஆதித்யா பாஸ்கரன், சுபாஷ் நடித்துள்ள ‘ஹாட்ஸ்பாட்’ – அமேசான் பிரைம் ▶வசந்த பாலன் இயக்கத்தில் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, ரம்யா நம்பீசன் நடித்துள்ள ‘தலைமைச் செயலகம்’ வெப் தொடர் – ஜீ 5 ▶சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ள ‘தி பாய்ஸ்’ – ஆஹா ▶ராஜமௌலி இயக்கியுள்ள ‘தி கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற அனிமேஷன் வெப் தொடர் – ஹாட்ஸ்டார்
CSK-RCB இடையேயான ஐபிஎல் போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தாலோ அல்லது மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டாலோ, CSK அணி 4ஆவது அணியாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். அதே வேளை, 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் RCB அணி இலக்கை அடைந்தால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். யார் வெற்றி பெறுவார்?
*பெற்றோரைப் பார்த்தே குழந்தைகள் வளர்வதால், அவர்கள் முன் பேசும்போது கெட்ட வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும். *மற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை ஒப்பீடு செய்யக் கூடாது. அவ்வாறு செய்வதால், அவர்களின் தனித்திறன் பாதிக்கப்படும். *துரித உணவுகளைத் தவிர்த்து, சத்தான உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். *தீய பழக்கங்களில் இருந்து விலகி, பெற்றோர் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் வரும் ஜூன் 2ஆம் தேதி முதல் அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள் நாடுகளில் தொடங்க உள்ளது. மே 26ஆம் தேதியுடன் ஐபிஎல் தொடர் நிறைவடைய உள்ளதால், இந்திய அணி வீரர்கள் இரண்டு குழுக்களாக அமெரிக்கா செல்ல உள்ளனர். 27ஆம் தேதியில் இருந்து உலகக் கோப்பைக்கான பயிற்சி போட்டிகள் தொடங்க உள்ளன. வரும் ஜூன் 1ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா முதல் பயிற்சி போட்டியை எதிர்கொள்ள உள்ளது.
சூர்யா நடிக்க உள்ள 44ஆவது படத்தில், நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, வரும் 2ஆம் தேதி அந்தமானில் தொடங்க உள்ளது. அங்கு, 40 நாள்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும், 2ஆம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
முருகனின் அறுபடை வீடுகளில் இறுதியானது அழகர் மலை. சுட்டப்பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட சுட்டிப்பையன், முருகப்பெருமான் என்பதை ஒளவை அறிந்து கொண்ட இடம் இந்த பழமுதிர்ச்சோலை. வாழ்க்கைக்கு கல்வி அறிவுடன் இறையருள் என்னும் மெய் அறிவு அவசியம் என்பதை உணர்த்திய இடமும் இதுதான். திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் இங்கு சென்று வழிபடலாம்.
ஓட்டுக்காக ஒவ்வொரு செயல்களையும் செய்யும் பழக்கத்தை நாட்டில் ஒழிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு சிறப்பு நேர்காணலில் பதில் அளித்த அவர், நாட்டிற்காக அல்லாமல், வாக்குக்காக எல்லாவற்றையும் செய்வீர்களா என கேள்வி எழுப்பினார். தான் எதை செய்தாலும் நாட்டுக்காக செய்வதாகவும், வாக்கு என்பது அதன் துணை கருவி மட்டுமே எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பொன்மொழி ஓட்ஸுக்கும் பொருந்தும். ஒரு மனிதர் சராசரியாக ஒரு நாளில் 30-35 கிராம் அளவில் (Instant oats) ஓட்ஸை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவில் ஓட்ஸ் சாப்பிட்டால், செரிமான அசௌகர்யத்தையும், சர்க்கரை அளவையும் அதிகரிக்கும். மேலும், ஓட்ஸில் இருக்கும் அதிக பாஸ்பரஸ் சத்து, சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு தொந்தரவுகளை வரவழைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால், கீழ்காணும் கோயில்களுக்கு சென்று மனதுருக வழிபாடு நடத்தினால் தீர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அந்தக் கோயில்கள் என்னென்ன? * சென்னை பாடி வலிதாயநாதர் கோயில் *தஞ்சை வசிஷ்டேஸ்வரர் கோயில் *திருவாரூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் * மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் *சிவகங்கை பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில் * திருச்செந்தூர் முருகன் கோயில்.
Sorry, no posts matched your criteria.