India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உருவத்தில் சிறிதாக இருப்பதால் நம்மை போல நுரையீரல் எறும்புகளுக்கு இல்லை. மாறாக, தனது உடலில் உள்ள Spiracles எனப்படும் துளைகள் வழியாகத்தான் இவை ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றன. துளை வழியாக உள்ளே செல்லும் ஆக்சிஜன் டிராக்கியா (Tracheae) எனப்படும் நுண்ணிய குழாய்கள் மூலம் செல்களுக்கு செல்கிறது. கார்பன் டை ஆக்சைடும் அதே வழியில் வெளியேறுகிறது. 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை (SIR) எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் நவம்பர் 11-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே SIR. பணிக்கு எதிராக தமிழக CM உள்பட, திமுக கூட்டணி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

உங்கள் தினசரி உணவில் நெய் சேர்க்குறீங்களா? தினமும் நெய் சாப்பிடுவது நல்லது. ஆனால் அளவு முக்கியம்! 1–2 டீ ஸ்பூன் நெய் ஒரு நாளைக்கு போதும். உணவுடன் சேர்த்து எடுத்தால் மிகவும் நல்லது. நெய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து தெரிஞ்சுகோங்க. உங்களுக்கு நெய் சாப்பிட பிடிக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க!

*இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன *வரும் 14-ம் தேதி நேரில் ஆஜராக அனில் அம்பானிக்கு ED சம்மன் *₹4 கோடி வருமான வரித்துறை வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சாதகமான தீர்ப்பு *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்த நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு வங்கிகள் சங்கம் கண்டனம் *வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் மின்விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நகர்ப்புற தூய்மை குறித்த சமீபத்திய கணக்கெடுப்பு, ஸ்வச் பாரத் மிஷன் ஆண்டு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில், சிறிய நகரங்களை விட பெருநகரங்கள் மோசமாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரம் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE IT.

பிஹார் தேர்தலில், காங்கிரஸும், ஜன் சுராஜ் கட்சியும் எதிரெதிராக களம் காண்கின்றன. இந்நிலையில், ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டுக்கு, ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரஷாந்த் கிஷோர் ஆதரவு தெரிவித்துள்ளார். ECI-க்கு எதிராக ராகுல் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்ற அவர், வாக்குத் திருட்டு பிஹார் தேர்தல் முடிவை மாற்றலாம் என்ற ராகுலின் அச்சத்தை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

பணம் பறிப்பதும், எங்களை பிரிப்பதும் தான் ஜாய் கிரிசில்டாவின் நோக்கம் என மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி பிரியா தெரிவித்துள்ளார். தனக்கு ஒரு வீடு, மாதம் ₹8 லட்சம் வேண்டும் என ஜாய் கிரிசில்டா கேட்பதாகவும், ஊடகங்களை தனிப்பட்ட பொருளாதார லாபத்திற்காக பயன்படுத்துவதாகவும் ஸ்ருதி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கணவருடன் உறுதியாக நிற்கிறேன், அவரை இறுதி வரை காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் 2 முறை அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹560 அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் ₹560 உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது 1 கிராம் ₹11,320-க்கும், 1 சவரன் ₹90,560-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில நாள்களாக குறைந்துவந்த தங்கம் விலை, இன்று மட்டும் சவரனுக்கு ₹1,120 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, 5,322 அரசுப் பள்ளிகளில் 6,672 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ₹127.57 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 2026- 27-க்குள் இந்த வகுப்பறைகள் அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் சொத்துகளை ED முடக்கியுள்ளது. அதன்படி ரெய்னாவுக்கு சொந்தமான ₹6.64 கோடி மியூச்சுவல் ஃபண்ட் நிதியை முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஷிகர் தவானுக்கு சொந்தமான ₹4.53 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகளையும் ED முடக்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் குறித்து இருவரிடமும் ED விசாரணை நடத்திய நிலையில், தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.