News July 7, 2025

மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங் காலமானார்

image

‘UP Tiger’ என அழைக்கப்பட்ட மூத்த அரசியல் தலைவர் குன்வர் ஆனந்த் சிங்(87) காலமானார். மன்காபூர் அரச குடும்பத்தை சேர்ந்த இவர் கோண்டா தொகுதியிலிருந்து 4 முறை MP-யாக தேர்வு செய்யப்பட்டவர். தற்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராக உள்ள கீர்த்தி வர்தனின் தந்தையாவார். உத்தரபிரதேச அரசியலில் மிக முக்கியமான முகமாக அறியப்பட்ட குன்வர் மறைவுக்கு அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News July 7, 2025

நயன்தாரா ஆவணப்படத்திற்கு மீண்டும் சிக்கல்

image

நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக தனுஷ் ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழங்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகளை அதில் பயன்படுத்தியதாக ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட் வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

News July 7, 2025

இன்னொரு ரிதன்யாவா?… சென்னை பெண்ணுக்கு சோகம்

image

வரதட்சணை கொடுமையால் திருப்பூர் ரிதன்யாவை இழந்த சோகமே இன்னும் மறையவில்லை. இந்நிலையில், சென்னை பெண் வழக்கறிஞர் ஒருவர் திருமணமான 4 மாதங்களில் மர்மமாக உயிரிழந்திருக்கிறார். 100 சவரன் நகைகள், ₹4 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருள்கள் கொடுத்தும் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண்ணின் பெற்றோர் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வரதட்சணை கொடுமையால் இன்னும் எத்தனை உயிர்கள் போகுமோ?

News July 7, 2025

பெரிய தொகைக்கு ஏலம் போன சேவாக் மகன்

image

டெல்லி பீரிமியர் லீக் ஏலத்தில் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்கின் மகன் பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆர்யவீர் சேவாக்கை சென்ட்ரல் டெல்லி கிங்ஸ் அணி ₹8 லட்சத்துக்கு எடுத்துள்ளது. சேவாக்கை போல் அவரும் அதிரடி தொடக்க வீரர். அதேபோல் விராட் கோலியின் உறவினரான ஆரியவீரை சவுத் டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் ஒரு லட்சத்துக்கு வாங்கியுள்ளது.

News July 7, 2025

பாகிஸ்தான் உளவாளிக்கு விருந்து அளித்த கேரள அரசு

image

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு முன்பு பாக்., பெண் உளவாளிக்கு கேரள அரசு செலவுகள் செய்தது RTI-ன் மூலம் தெரியவந்து சர்ச்சையாகியுள்ளது. பாக்., ஆதரவாக உளவு பார்த்ததாக பிரபல யூடியூபரான ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். கைது செய்வதற்கு முன் கேரள அரசின் நிதியில் அவர் அம்மாநிலத்தை சுற்றி பார்த்துள்ளார். சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தேர்தெடுக்கப்பட்ட 41 சமூக ஊடகப் பிரபலங்களில் ஜோதியும் ஒருவர்.

News July 7, 2025

டிரம்ப்பின் மிரட்டலால் குறைந்த தங்கம் விலை

image

பிரிக்ஸ் நாடுகள் மீது 10% வரிவிதிக்கப்படும் என்று டிரம்ப் இன்று மிரட்டல் விடுத்த உடனேயே, சர்வதேச சந்தையில் தங்கம் விலை 0.9% ($3,306/அவுன்ஸ்) அளவுக்கு சரிய, டாலர் மதிப்பு சற்று உயர்ந்தது. வரி தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை தொடரும் நிலையில், நல்ல முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் சந்தையில் முதலீடு அதிகரித்து, தங்கம் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கலாம்.

News July 7, 2025

மாலை 6 மணி வரை முக்கிய செய்திகள்!

image

➤மேட்டுப்பாளையத்தில்<<16979878>> ரோடு ஷோவில்<<>> பங்கேற்ற இபிஎஸ்
➤<<16979271>>26/11 தாக்குதலில் <<>>பாக்.,க்கு நேரடி தொடர்பு இருந்தது உறுதி
➤சர்ச்சையை ஏற்படுத்திய <<16975904>>டிரம்பின் வரி<<>> விதிப்பு அறிவிப்பு
➤ <<16977265>>செல்போன் ரீசார்ஜ்<<>> கட்டணத்தை உயர்த்த திட்டம்?
➤ <<16978348>>டெஸ்டில் 367 ரன்களை<<>> குவித்த தென்னாப்பிரிக்க கேப்டன்

News July 7, 2025

பெருங்கவிக்கோ உடல் குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

image

மூத்த தமிழறிஞரான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 4-ம் தேதி உயிரிழந்த அவரது உடலுக்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யவும் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், 30 குண்டுகள் முழங்க சேதுராமனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP

News July 7, 2025

2010 முதல் விலையே மாறாது Parle G-யின் ரகசியம் தெரியுமா?

image

எவ்வளவு விலைவாசி உயர்வுகள் வந்தாலும், Parle G விலை மட்டும் எப்படி விலை உயரவே இல்லை என்ற டவுட் பலருக்கும் உண்டு. விலைக்கு பதிலாக, நைசாக வேறொரு வழியில், விலைவாசி உயர்வை கையாண்டு வருகிறது Parle G நிறுவனம். 2010-ல் ₹5-க்கு 60 கிராம் பிஸ்கட் பாக்கெட் விற்கப்பட்டது. ஆனால், அது 2015-ல் 50 கிராமும், 2018-ல் 38 கிராமும், 2020-ல் 33 கிராமும், தற்போது 30 கிராமும் வழங்கப்படுகிறது. ஆனால் விலை ₹5 தான்.

News July 7, 2025

நெல்லையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

image

நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(ஜூலை 8) விடுமுறையாகும். இதனால், கல்வி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 19-ம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!