India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வை எதிர்க்கட்சிகள் முற்றாக எதிர்க்கின்றன. பிரதமரோ, முதல்வரோ அல்லது அமைச்சரோ – தொடர்ந்து 30 நாள்கள் சிறையில் இருந்தாலே, அவர் பதவியிழப்பார் என்று இந்த மசோதா சொல்வதே காரணம். தேர்தலில் வீழ்த்த முடியாத மாநில அரசியல் தலைவர்களை, வழக்குகள் மூலம் சிறையில் தள்ளி வீழ்த்தும் மறைமுக வியூகமே இது என்கின்றனர் எதிர்கட்சிகள். உங்கள் கருத்து?
மத்தியபிரதேசத்தில் தான் ஒருதலை காதலை வளர்த்துவந்த 26 வயது ஆசிரியையை மீது 18 வயது மாணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருநாள் தன்னை பார்த்து கமெண்ட் அடித்ததால் மாணவர் மீது ஆசிரியை போலீசில் புகாரளித்துள்ளார். இதனால் கடுப்பான அம்மாணவன் டீச்சரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளார். ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சுப்மன் கில், ஜெய்ஸ்வால் இல்லாத போது மட்டுமே சாம்சனுக்கு ஓபனிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் அகார்கர் கூறியது சாம்சனுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. 2025 ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் கில் இடம்பெற்றிருப்பதால், சாம்சன் உட்கார வைக்கப்படவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதனால் அவரது டி20 கரியர் கேள்விக்குறியாகியுள்ளது.
காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதில், 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அஜித்குமாருக்கு எதிராக திருட்டு புகார் வழக்கும் CBI வசம் உள்ள நிலையில், அதன் குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. திடுக்கிடும் திருப்பமாக, இந்த வழக்கில் நிகிதா மீதும் FIR பதிவு செய்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு பயந்து நேதாஜி ஜெர்மனிக்கு தப்பி ஓடியதாக, கேரள பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்த வரலாற்று பிழை இடம்பெற்றதாகவும், இதை அறிந்த உடன், பிழையை நீக்க உடனே உத்தரவிட்டுள்ளதாகவும் அம்மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். உண்மையில், ஆங்கிலேயரை விரட்டவே ஜெர்மன் சென்று ஹிட்லர் உதவியை நேதாஜி நாடினார்.
‘தர்பார்’ கதையை மிக சீக்கிரமாக எழுதியது அப்படத்தின் தோல்விக்கு காரணமாக இருக்கலாம் என ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். முதலில் அப்பா – மகள் கதையாக இருந்ததாகவும், நயன்தாரா படத்திற்குள் வந்தவுடன் கதையின் போக்கு முற்றிலுமாக மாறியதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், மும்பை பின்னணி, நடிகர்கள் உள்ளிட்டவற்றை மாற்றியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும் என்று தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும் TN Rising மாநாட்டை நடத்தவுள்ளதால், CM ஸ்டாலின் ஜெர்மனி செல்ல உள்ளார் எனவும் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் TRB.ராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அவர், 2024 முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் 80% வரை அமலுக்கு கொண்டு வந்து திமுக அரசு சாதனை படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
9 – 12-ம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு பன்முகத்திறனை ஊக்குவிக்கும் வகையில் கலைப்பட்டறையை அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் போதை எதிர்ப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை எடுத்துச் செல்லும் நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
எப்போதெல்லாம் அரசுகளுக்கு நெருக்கடி வருகிறதோ, அப்போதெல்லாம் புதிய சர்ச்சை உருவாக்கப்படும் என்பார்கள். தற்போது வாக்காளர் பட்டியல் சர்ச்சையை கையிலெடுத்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களை தொடங்கியுள்ளன. ராகுலும் ‘வோட் அதிகார்’ பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் ‘<<17462799>>PM, CM<<>> பதவிபறிப்பு மசோதாவை பாஜக அரசு கொண்டு வந்துள்ளதா என சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் (GCC) தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிராக உழைப்போர் உரிமை இயக்கம் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த HC, மண்டலம் 5, 6-ல் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பான GCC தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளது. தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்ற நிலை எழவில்லை என்றும் கோர்ட் கூறியுள்ளது. இதற்காக போராட்டமும் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.