India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியது ஏன் என்பதற்கு இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். தனக்கு முதுகுப் பிரச்சினை இருப்பதை தெரிவித்த அவர், அதன் காரணமாக தன்னால் தொடர்ந்து 2 நாள்கள் பீல்டிங் செய்ய முடிவதில்லை என கூறினார். இதனாலேயே டெஸ்டில் ஓய்வு எடுத்துள்ளதாக கூறிய அவர், ஆனால் ODI-ல் ஒரு நாள் பீல்டிங் செய்த பிறகு, மீண்டுவர நேரம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர, ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க, US அதிபர் டிரம்ப், ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால் இந்த தடைகளுக்கெல்லாம் ரஷ்யா ஒருபோதும் அஞ்சாது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் ரஷ்ய பொருளாதாரத்தை பாதிக்காது என்று கூறியுள்ள அவர், எந்தவொரு அழுத்தத்திற்கும் ரஷ்ய அடிபணிய போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,600 சரிவை கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்து வருவதே. ஆனால் இன்று காலை முதலே சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை இன்று மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேவை: கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, இஞ்சி, மிளகு, சீரகம் *செய்முறை: வெந்நீரில் தலா 5 கற்பூரவள்ளி & துளசியை சேர்க்கவும். பின்னர், வெற்றிலையின் காம்போடு நரம்பை நீக்கிவிட்டு அதனுடன் சேர்க்கவும். அடுத்ததாக, மிளகு, இஞ்சி, சீரகத்தை இடித்து சேர்க்கவும். இவற்றை நன்கு கொதிக்கவிட்டு, அடுப்பை அணைத்து வடிகட்டி ஆறவைத்து குடிக்கலாம். இது நெஞ்சு சளியை விரட்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கரூர் விவகாரத்தை பயன்படுத்தி தவெகவுடன் கூட்டணி வைக்க EPS முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டிய CM ஸ்டாலினுக்கு, செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், அதிமுக எந்த காலத்திலும் கூட்டணிக்காக அலைந்ததில்லை. எங்கள் கொள்கையோடு மக்களை காப்பாற்ற யார் வந்தாலும் அவர்களை தூக்கி கொண்டாடுவோம். அதேநேரம் எங்கள் காதை கடித்தால், தூக்கி காலுக்கு கீழே போட்டு மிதிப்போம் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். அவருக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி வைரலாகியுள்ளது. இன்ஸ்டாவில் Heart emoji-யுடன் ‘Save the date 29th October’ என குறிப்பிட்டு, ஜான்வி பதிவிட்டுள்ளார். இதை வைத்து அவருக்கு திருமணம் நடக்கப்போவதாக செய்திகள் வெளிவருகின்றன. ஜான்வி, ஷிகர் பஹாரியா என்பவரை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடை குறைக்க விரும்புபவர்கள், க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அது மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் என்பதால், டாக்டர்களும் க்ரீன் டீயை பரிந்துரைப்பார்கள். ஆனால், அதே நேரத்தில் இந்த டீயை அதிகம் குடிப்பதால், உடல்நல பிரச்னைகள் வரலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது. தலைவலி, சீரற்ற இதயத்துடிப்பு, கல்லீரல் பாதிப்பு & தூக்கமின்மை ஆகிய ஏற்படலாம் என கூறப்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அனைத்தும் நஞ்சே!

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க 10 நாள் கெடு விதித்ததால், EPS – செங்கோட்டையனுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில், தான் 10 நாள் கெடு விதிக்கவில்லை; என்னுடை கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக கூறி செங்கோட்டையன் ட்விஸ்ட் கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, சில நாளாக அமைதியாக இருந்த அவர், மீண்டும் EPS உடன் இணைந்து தேர்தல் & கட்சிப்பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றைய போட்டியில் குல்தீப் யாதவ் அணியில் இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர். ஆல்ரவுண்டர்களான சுந்தர் & நிதிஷ் ரெட்டி ஆகியோர் பெரிய தாக்கத்தை பவுலிங்கில் கொடுக்கவில்லை. இவர்களில் யாராவது ஒருவருக்கு பதிலாக அணியில் குல்தீப் இருந்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அக்.27-ம் தேதி ( திங்கள்கிழமை) விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். அதேபோல், இவ்விழாவையொட்டி, நெல்லைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படவுள்ளன.
Sorry, no posts matched your criteria.