News October 19, 2025

ஹெல்மெட் அணிந்தால் தலைமுடி உதிருமா?

image

பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது அவசியம். ஆனால், ஹெல்மெட் அணிவதால் தலைமுடி உதிர்வதாக பலரும் நினைக்கின்றனர். இந்த கருத்துக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இறுக்கமாக ஹெல்மெட் அணிவது, உட்புறம் சுத்தமில்லாமல் இருப்பது தலையில் வியர்வை மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெல்மெட்டை சுத்தம் செய்து, காற்றோட்டமாக அணிய அறிவுறுத்தியுள்ளனர்.

News October 19, 2025

நகை கடன்… HAPPY NEWS

image

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது. தீபாவளி செலவை கணக்கில் கொண்டு மக்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும் எனவும் கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

News October 19, 2025

47 முறை ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்: காஸா ஊடகம்

image

போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் 47 முறை மீறியதாக காஸா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பிணைக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் வரை, காஸாவுக்கு உதவி பொருள்களை எடுத்து செல்லும் முக்கிய வழியான ரஃபா எல்லை திறக்கப்படாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

இந்தியில் வாழ்த்து சொன்ன சேகர்பாபு

image

துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

News October 19, 2025

துருவ் விக்ரமின் அடுத்த படம் இதுவா?

image

’பைசன்’ படத்துக்கு பிறகு துருவ் விக்ரமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவருடைய அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. இந்நிலையில், துருவ்வின் அடுத்த படத்தை ’டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவார் என கூறப்படுகிறது. தற்போது, அவர் ரவி மோகனை வைத்து ’கராத்தே பாபு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீஸ் ஆனதும் துருவ் உடனான படத்தை தொடங்கலாம் என கூறப்படுகிறது.

News October 19, 2025

உங்களுக்கு இப்படி ஒரு பயம் இருக்கா?

image

பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அதுவே அதீத அச்ச உணர்வாக இருப்பதை ஆங்கிலத்தில் போபியா என்று கூறுகின்றனர். இந்த தொகுப்பில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத போபியாக்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதை கண்டால் பயம் என்று கமெண்ட் பண்ணுங்க. SHARE.

News October 19, 2025

BREAKING: விஜய் முக்கிய முடிவு

image

தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான பணிகளை தீவிரப்படுத்த தவெக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, அவரது பரப்புரை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News October 19, 2025

மதியத்திற்கு மேல்… வந்தது புதிய எச்சரிக்கை

image

30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர், கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

News October 19, 2025

Women’s WC: இந்திய அணி பவுலிங்

image

மகளிர் உலக கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்யவுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய இந்தியா, அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த இப்போட்டியில் வெல்வது அவசியமாகும். நடப்பு தொடரில் தோல்வியே தழுவாத இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தும் பட்சத்தில் அரையிறுதிக்கு 3-வது அணியாக முன்னேறும். இந்திய அணியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பதில் ரேணுகா சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

News October 19, 2025

IRCTC-ல் டிக்கெட் புக் செய்பவர்களின் கவனத்திற்கு!

image

பண்டிகை காலத்தில் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் புக் செய்வதால் சில நேரங்களில் IRCTC-யின் சர்வர் டவுன் ஆகிவிடுகிறது. இதனால் சில சமயங்களில் டிக்கெட் புக் ஆகாமல் பணம் டெபிட் ஆகிவிடுகிறது. இதற்கான ரீஃபண்ட் 3 நாட்களுக்குள் உங்கள் வங்கிக்கு வரவேண்டும். அப்படி வரவில்லை எனில், care@irctc.co.in என்ற மின்னஞ்சலுக்கு புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!