India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை இந்தியா முழுவதும் பட்டாசு சத்தமும், மகிழ்ச்சியும் சிரிப்பலையும் நிறைந்திருக்கும். ஆனால், சிவகங்கையின் மாம்பட்டி கிராமத்தில் 1954-ம் ஆண்டு முதல் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. வறுமையால் கடன் வாங்கி விவசாயம் செய்தவர்கள், தீபாவளிக்கும் கடன் வாங்கி, வறுமையில் சிக்கியுள்ளனர். இதிலிருந்து மீள, தீபாவளியை கொண்டாடாமல், பொங்கலை சிறப்பாக கொண்டாடலாம் என முடிவு செய்ய, அந்த வழக்கம் இன்றுவரை தொடருகிறது.
கரூர் துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூட விஜய் பக்கம் உள்ளனர், ஆனால் அவர் கூடவே இருக்கும் சிலர் விஜய் பக்கம் இல்லை என கஸ்தூரி கூறியுள்ளார். எனவே, அவர் தனது உடனிருக்கும் சிலரின் சகவாசத்தை கட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கரூர் துயரத்துக்கு பிறகு, விஜய் தலைமையில் கூட்டணி என்பது அரசியல் களத்தில் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார். சகவாசம் என யாரை குறிப்பிடுகிறார் கஸ்தூரி?
பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது அவசியம். ஆனால், ஹெல்மெட் அணிவதால் தலைமுடி உதிர்வதாக பலரும் நினைக்கின்றனர். இந்த கருத்துக்கு அறிவியல் ஆதாரம் இல்லை என்று டாக்டர்கள் கூறுகின்றனர். அதேநேரம், இறுக்கமாக ஹெல்மெட் அணிவது, உட்புறம் சுத்தமில்லாமல் இருப்பது தலையில் வியர்வை மற்றும் அரிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே ஹெல்மெட்டை சுத்தம் செய்து, காற்றோட்டமாக அணிய அறிவுறுத்தியுள்ளனர்.
தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு இந்த வாரத்தில் இருந்து அமலுக்கு வருகிறது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது. தீபாவளி செலவை கணக்கில் கொண்டு மக்களுக்கு தாமதமின்றி கடன் வழங்க வேண்டும் எனவும் கூட்டுறவு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை, இஸ்ரேல் 47 முறை மீறியதாக காஸா ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் 38 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 143 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பிணைக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும் வரை, காஸாவுக்கு உதவி பொருள்களை எடுத்து செல்லும் முக்கிய வழியான ரஃபா எல்லை திறக்கப்படாது என்று இஸ்ரேல் PM பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 800 வடஇந்திய குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு பரிசு பொருள்களை வழங்கி அமைச்சர் சேகர்பாபு இந்தி மொழியில் வாழ்த்து தெரிவித்தார். இதன்பின் அவர் பேசுகையில், வடஇந்திய தொழிலாளர்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாகவும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவிற்கு உங்களுடைய ஆதரவு வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
’பைசன்’ படத்துக்கு பிறகு துருவ் விக்ரமை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இவருடைய அடுத்த படம் என்ன என்ற எதிர்பார்ப்பும் வலுத்துள்ளது. இந்நிலையில், துருவ்வின் அடுத்த படத்தை ’டாடா’ இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குவார் என கூறப்படுகிறது. தற்போது, அவர் ரவி மோகனை வைத்து ’கராத்தே பாபு’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இது ரிலீஸ் ஆனதும் துருவ் உடனான படத்தை தொடங்கலாம் என கூறப்படுகிறது.
பொதுவாக வெளியில் தைரியமான நபராக காட்டி கொள்ளும் எல்லோருக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். அதுவே அதீத அச்ச உணர்வாக இருப்பதை ஆங்கிலத்தில் போபியா என்று கூறுகின்றனர். இந்த தொகுப்பில் இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத போபியாக்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம். போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு எதை கண்டால் பயம் என்று கமெண்ட் பண்ணுங்க. SHARE.
தீபாவளிக்கு பிறகு தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்க விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான பணிகளை தீவிரப்படுத்த தவெக நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். தீபாவளி முடிந்ததும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து விஜய் ஆறுதல் தெரிவிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து, அவரது பரப்புரை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
30 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, கரூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, திருப்பூர், கோவை, தேனி, மதுரை, திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.