India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அழுத்தத்திற்கு பணிந்து அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் அணுகுமுறை நீண்டகால தொலைநோக்கு பார்வையை கொண்டது எனவும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க வரிவிதிப்பை கடந்து செயலாற்றுவது எப்படி என யோசித்து வருவதாகவும், புதிய சந்தைகளை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டப்படும் உணவுப் பொருள்களை உட்கொள்வது, உடல் நலத்திற்கு நல்லதல்ல என FSSAI எச்சரித்துள்ளது. நாளிதழ்களில் அச்சிடும் மையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், பேசிலஸ் நுண்ணுயிரியல் தாக்குதலும் குடற்புற்றுநோயை ஏற்படுத்துகிறதாம். இதன் காரணமாகவே உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும், பாதுகாத்து வைப்பதற்கும் தாள்களை பயன்படுத்த வேண்டாமென FSSAI அறிவுறுத்தியுள்ளது.

‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போனில் பேசி வாழ்த்து தெரிவித்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு நான் பார்த்த சினிமா, இதை எடுத்த இயக்குநர் யார் என தேட வைத்தது மாரி, நீங்கள் தூரத்தில் இருக்கிறீர்கள், நான் இங்கிருந்தே கட்டித் தழுவுகிறேன் என வைகோ தெரிவித்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.

வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, அனைத்து மகளிருக்கும் ₹1,000 உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக சேர சுமார் 30 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தகுதியுள்ள மகளிருக்கு டிச.15-ம் தேதி முதல் பணம் வரவு வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போதைய நடவடிக்கையால் லட்சக்கணக்கான மகளிர் பயனடைய உள்ளனர். SHARE IT.

இரவில் தேன் சாப்பிடுவதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றில் சில முக்கியமான பலன்கள் என்னென்ன என்று மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அதில், உள்ள நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க. இதுபோன்று வேறு ஏதேனும் நன்மைகள் உங்களுக்கு தெரிந்தால், கமெண்ட்ல சொல்லுங்க.

பல்கேரியவைச் சேர்ந்த பாபா வாங்காவின் முன்னறிவிப்புகள் பலதும் நிஜத்தில் நடந்துள்ளன. அந்தவகையில், 2026-ல் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான நிதி நெருக்கடி ஏற்படும் எனவும், பாரம்பரிய நிதி அமைப்புகள் சீர்குலையும் என்றும் கணித்துள்ளார். பாரம்பரிய அமைப்புகள் பாதிக்கப்பட்டால், அது நிச்சயம் தங்கம் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். அதன்படி தங்கத்தின் விலை 20 – 40% வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரூர் துயரத்தையொட்டி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 2-ம் கட்ட தவெக தலைவர்கள் மீது விஜய் அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களின் பதவிகளை கலைக்கும் அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸி.,-க்கு எதிரான 3-வது ODI போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் ரோஹித் சர்மா முக்கிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது. அதன்படி, நாளைய போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்தால், ODI போட்டிகளில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். இந்த பட்டியலில் 351 சிக்ஸர்களுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அஃப்ரிடி முதலிடத்திலும், 346 சிக்ஸர்களுடன் ரோஹித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர்.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைந்ததை சுட்டிக்காட்டி, உங்கள் சகாவைப் பார்த்தாவது மனம் மாறுங்கள் என CM ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என ஆடம்பர விழாக்களை நடத்தினால் போதுமா, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற வேண்டாமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆட்சி முடியும் நேரத்திலாவது, மாணவர்கள் நலன் காக்க முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.