India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குளிர் பிரதேசமான ஐஸ்லாந்து நாட்டில், முதல் முறையாக சொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3 கொசுக்கள் பிடிக்கப்பட்டன. இந்த கொசுக்கள், நோய்களை பரப்பாத வகை என்றாலும், இது காலநிலை மாற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஐஸ்லாந்தின் பனியுலகில் இது ஒரு புதிய அத்தியாயமாகும். கொசுக்களுக்கு வெப்பநிலை பொதுவாக ~10°C க்கு மேல் தேவை என்பதால், அங்கு கொசுக்கள் இல்லாமல் இருந்து வந்தது.

பிஹாரில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட PM மோடி, பொதுமக்களை மொபைலில் டார்ச்சை எரியச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அவர்களும் டார்ச்சை ஆன் செய்ய, ‘இவ்வளவு வெளிச்சம் இருக்கும்போது எதற்கு Lantern விளக்குகள்?’ என்று கேட்டார். RJD-யின் சின்னம் Lantern விளக்குகள் என்பதையே மோடி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் கட்சி சின்னங்களுக்கு ஒரு பன்ச் சொல்லுங்களேன்.

சமீப காலமாக தமிழ் திரைத்துறை பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளது. குறுகிய காலத்தில் பல பிரபல சினிமா நட்சத்திரங்கள் பிரிந்துவிட்டனர். தமிழ் சினிமா இவர்களை என்றும் நினைவில் வைத்திருக்கும். இவர்களது நகைச்சுவை, இசை, திரைப்படங்கள் ஆகியவை எப்போதும் நம் இதயங்களில் உயிர் வாழும். யாரெல்லாம் மறைந்தனர் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

ஒருவரின் வாழ்க்கையை தழுவியோ (அ) அப்படியாகவோ சினிமாவாக எடுப்பதே Biopic என அழைக்கப்படுகிறது. இவ்வாறு தமிழ் சினிமாவில் வெளியான சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல்வாதிகளின் பயோபிக் படங்களை வலதுபக்கம் swipe செய்து பாருங்கள். தற்போதைய சூழலில் MK ஸ்டாலின், EPS, கி.வீரமணி, விஜயகாந்த், திருமாவளவன், அண்ணாமலை ஆகியோரது அரசியல் பயணத்தை பயோபிக்காக எடுத்தால் யாரை நடிக்க வைக்கலாம் என்று கமெண்ட் பண்ணுங்கள்.

பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என மாணவர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக நவ.4-ம் தேதி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடவுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருப்பதை கருத்தில்கொண்டு தேர்வுகளை முன்னதாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அவர் அறிவிக்க உள்ளார்.

பாக்., எல்லை அருகே சர் கிரீக் பகுதியில் வரும் 30-ம் தேதி முதல் நவ.10 வரை முப்படைகள் பயிற்சி நடத்த உள்ளன. சர் கிரீக் பகுதியில் பாக்., ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், இந்தியா பயிற்சி மேற்கொள்ள உள்ளது. ஆனால், அதற்கு முன்பாக வரும் 28, 29-ம் தேதிகளில் பாக்., தனது வான்வெளியில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால், அந்நாடு பயிற்சி (அ) ஆயுத சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் உருவாவதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மருந்து பொருள்களை கையிருப்பில் வைக்க அனைத்து மாவட்ட ஹாஸ்பிடல்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. பாரசிட்டமால், குளுக்கோஸ், உப்பு கரைசல் உள்ளிட்டவை தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காய்ச்சல் அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் தொடரை வென்றாலும் இந்தியாதான் உலகின் நம்பர் 1 அணி என ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவும், கோலியும் கடந்த 10 ஆண்டுகளாக எதிர் அணிகளை எவ்வாறு வீழ்த்தி இருக்கிறார்கள் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இந்திய அணியின் செயல்பாடுகளில் இருந்து எங்களுடைய இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

LIC-யால் பலனடைவது பாலிசிதாரர்கள் இல்லை, மோடியின் நண்பர்களே என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். அதானி குழுமத்தில் <<18102060>>LIC<<>> ₹33,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருந்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மோடியின் நண்பரின் பாக்கெட்டை நிரப்ப, 30 கோடி பாலிசிதாரர்களின் பணத்தை சுரண்டுவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் பழம்பெரும் <<18101845>>நடிகர் சதிஷ் ஷா<<>>(74) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்கின் உண்மையான ஜாம்பவானாக சதிஷ் ஷா என்றும் நினைக்கூரப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனது நகைச்சுவையால் எண்ணற்ற மக்களை சிரிக்க வைத்தவர் என புகழாரம் சூட்டிய மோடி, அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். RIP
Sorry, no posts matched your criteria.