India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடிகர் தனுஷுக்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அதிரடி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று வெளியான நயனின் பட போஸ்டர் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போஸ்டரில், ’அவள் போரை தொடங்குகிறாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் தனுஷைதான் இப்படி மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று நெட்டிசன்கள் எழுதி வருகின்றனர்.
அரசுமுறை பயணமாக நைஜீரியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது. ‘கிராண்ட் கமாண்–டர் ஆப் தி ஆர்–டர் ஆப் தி நைஜர்’ என்ற அந்த விருதினை நைஜீரிய அதிபர் ‘போலோ அகமது தினுபு’ மோடிக்கு வழங்கினார். நைஜீரிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரேசில் செல்லும் பிரதமர் , அங்கு ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில் 15.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. அதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.
டிரம்ப் ஆட்சி எவ்வாறு இருக்கப்போகிறது என பல எதிர்பார்ப்புகள் தற்போதே அதிகமாக உள்ளது. ஆனால், அமெரிக்காவை சேர்ந்தவர்கள் அவரின் ஆட்சியில் இருந்து தப்பித்து கொள்ள, கப்பல் நிறுவனம் “வில்லா வி ஒடிஸி” 4 வருட உலக சுற்றுலாவை அறிவித்துள்ளது. இதற்கு ஒரு வருடத்திற்கு ரூ.33 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிபர் ஆட்சியில் தப்பிக்கும் வகையில் வெளியாகியுள்ள அறிவிப்பு உலகெங்கிலும் கவனம் பெற்றுள்ளது.
தெலுங்கு பேசும் மக்களையும், பெண்களையும் இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த அவரை சென்னை தனிப்படை போலீசார் பிடித்தனர். இதையடுத்து, நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை வரும் 29-ம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்டார்.
கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் Nayanthara: Beyond the Fairy Tale வெப் சீரிஸ் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த வெப் சீரிஸ் வெளியாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு, தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. இன்று காலை, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் டீசரும் 10:15 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு இன்றும் (நவ.18), நாளையும் (நவ.19) நடைபெறவுள்ளது. சிமெண்ட் கார்ப்பரேஷன் கழகம், கல்லூரி லைப்ரேரியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இத்தேர்வு நடைபெறவுள்ளது. காலை 9.30-க்கும், மதியம் 2.30-க்கும் தேர்வு தொடங்குகிறது. தேர்வறைக்கு காலை 8.30, மதியம் 1.30-க்குள் வர வேண்டும். அரை மணிநேரம் கிரேஸ் டைம் உண்டு. அதை தாண்டக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
டாடா ஸ்டீல் செஸ் சாம்பியன் தொடரில் நார்வே வீரர் கார்ல்சன் பட்டம் வென்றார். மே.வங்கத்தில் நடந்த இந்த தொடரில், பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது. இதில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் அவர் வென்ற 10-வது பட்டம் இதுவாகும். ஏற்கெனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
உத்தரபிரதேசத்தில் ரயிலை கவிழ்க்க நடைபெற்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது. பரேலி மாவட்டத்தில் உள்ள திப்னாபூர் ரயில் நிலையத்துக்கு அருகே சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்த போது, அங்குள்ள தண்டவாளத்தில் சிமெண்டு பலகை மற்றும் இரும்பு கம்பி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், அவசர பிரேக் மூலம் ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஹரியானா தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 36-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. 12 அணிகள் பங்கேற்றும் இந்த தொடரில் ஹரியானா அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
Sorry, no posts matched your criteria.