India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SBI வங்கியில் காலியாக உள்ள 996 Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ◆வயது: 20 – 42 வரை ◆கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி ◆சம்பளம்: ₹51,000 ◆தேர்ச்சி முறை: Short Listing & Personal interview ◆வரும் 23-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <

மக்களை கவனிக்க வைக்கும் படங்கள் குறைந்து வருவதால், தமிழ் சினிமா சரிவை நோக்கி நகர்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தமிழில் 32 திரைப்படங்கள் வெளியாகி சாதனை படைத்துள்ளதாம். ஆனால், இதில் சோகம் என்னவென்றால் படங்கள் எதுவும் வசூலில் சாதனையை படைக்கவில்லை. இந்த ஆண்டு இதுவரை வெளியான 262 படங்களில் 28 மட்டுமே பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளன. மொத்த எண்ணிக்கையில் இது 11% மட்டுமே என்பது பெரும் சோகம்.

வரி விதிப்பின் மூலம் US, இந்தியாவை அச்சுறுத்துகிறதா என ரஷ்ய அதிபர் புடினிடம் கேட்கப்பட்டது. அதற்கு, PM மோடியை அழுத்தத்தால் அடிபணிய வைக்க முடியாது என அவர் பதிலளித்தார். அதேபோல், தற்போதைய இந்திய பயணத்தின் போது AI துறையில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். மேலும், சீனாவில் SCO மாநாட்டில் எனது காரில் PM மோடியை அழைத்து சென்றது, எங்கள் நட்பின் அடையாளம் என்றும் கூறியுள்ளார்.

பள்ளிக்கு புறப்பட்டு காத்திருக்கும்போது, பஸ் கூட்டமாக வருவதால், மாணவர்கள் காலையிலேயே சற்று சோர்வடைகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி மாணவர்களுக்காக மட்டும் கட்டணமில்லா பஸ் சேவைகள் சென்னையில் அமலில் உள்ளது. இந்நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக கட்டணமில்லா பஸ் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.

ஸ்டாடிஸ்டா ஆராய்ச்சித் துறை மற்றும் உலக மக்கள்தொகை மதிப்பாய்வு 2025-ன் படி, அதிக மது அருந்தும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், டாப் 10-ல் இடம்பிடித்த நாடுகள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்தியாவின் பெரு நகரங்களில் மது நுகர்வு அதிகரித்து வந்தாலும், டாப் 10-ல் இந்தியா இடம்பெறவில்லை. SHARE.

புதுச்சேரியில் தவெகவின் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க <<18447638>>போலீசார் மறுத்துவிட்டனர்<<>>. அதேசமயத்தில் பொதுக்கூட்டம் நடத்திக்கொள்ளலாம் எனவும் போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வரும் டிச.9-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். அதன்படி புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த, தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆஸி.,யின் மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். அவர் 102 டெஸ்ட் போட்டிகளில் 415 விக்கெட்களை சாய்த்துள்ளார். முன்னதாக, பாக்., ஜாம்பவான் வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஸ்டார்க் 16-வது இடத்தில் உள்ளார்.

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் திமுக, அதிமுக கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில், EPS முன்னிலையில், திருவாரூர் நகர திமுக பிரமுகர் சின்னவன் பிரகாஷ் அதிமுகவில் இணைந்தார். அதேபோல், திண்டுக்கல் மதிமுக சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த அனீஸ் பாபு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், திண்டுக்கல் சீனிவாசன் முன்பு தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.

திருப்பரங்குன்றத்தில் மத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக உத்தரவு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக சுவாமிநாதன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தீபம் ஏற்ற அனுமதி வழங்கியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், சுவாமிநாதன் மீது HC தலைமை நீதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நவ.4 முதல் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டிச.16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், உயிரிழந்தோர் 25.72 லட்சம், கண்டறிய முடியாதோர் 8.95 லட்சம், நிரந்தர இடமாற்றமானோர் 39.27 லட்சம் என 77.52 லட்சம் வாக்காளர்கள் வரை நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.