India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கு ராமதாஸ், பிரேமலதா ஆதரவு தெரிவித்துள்ளது அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CP ராதாகிருஷ்ணன் நல்ல தேர்வு என ராமதாஸ் கூறியுள்ள நிலையில், தமிழர் ஒருவர் துணை ஜனாதிபதியாக வர அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரேமலதா கூறியுள்ளார். 2026 தேர்தலில் அவர்கள் NDA அணியில் இணைவதற்கான அச்சாரம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பாஜகவுடன் கூட்டணி வைத்து CP ராதாகிருஷ்ணனை திமுக MP-யாக வெற்றி பெற செய்தபோது மதவாதம் குறித்து தெரியாதா என கனிமொழிக்கு EPS கேள்வி எழுப்பியுள்ளார். குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளை அடிக்கடி மாற்றும் கட்சி திமுக என சாடிய அவர், RSS காரர் என்பதால் ஆதரிக்க மாட்டோம் என்பது நாடகம் என்றார். மேலும், தற்போதைய ஆட்சியில், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் விலை உயர்ந்துள்ளது என்றார். உங்கள் கருத்து?
எளிதாக ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10, விண்டோஸ் 11 பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. Microsoft Office, Microsoft Dynamics, Browser, Device, Developer Tools, Open Source Software ஆகியவை ஆபத்து பட்டியலில் உள்ளன. இச்செயலிகளை உடனே அப்டேட் செய்யவும், விண்டோஸை அப்டேட் செய்து சிஸ்டமை ரீபூட் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காசோலைகளை பணமாக்க தற்போது 2 நாள்கள் வரை ஆகிறது. பணமாக்கும் செயல்பாட்டுக்கு CTS முறை பின்பற்றப்படுகிறது. இந்நிலையில், 3 மணி நேரத்தில் காசோலையை பணமாக மாற்றும் முறையை செயல்படுத்த வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. Continuous Clearing, Settlement on Realisation முறையில் இச்செயல்பாடு விரைவாக முடிக்கப்படும். அக்.4 முதல் அமலுக்கு வரும் புதிய முறையால் தனிநபர்கள், நிறுவனங்களின் சிரமம் குறையும்.
2034 ஃபிஃபா உலகக்கோப்பைக்காக சவுதி அரேபியா ஒரு புதுமையான மைதானத்தை உருவாக்க உள்ளது. அந்நாட்டின் The Line ஸ்மார்ட் சிட்டியில், பாலைவனத்தில் இருந்து 350 உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் மைதானம் கட்டப்பட உள்ளது. 46,000 பேர் அமரும் வகையில், $1 பில்லியன் மதிப்பில் அந்த வான்வெளி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான கட்டுமானம் 2027-ல் தொடங்கப்பட்டு 2032-ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2010-ல் அமித்ஷா குஜராத் அமைச்சராக இருந்த போது, சொராபுதீன் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார், அப்போது அவர் ஒழுக்கத்தை நிலைநாட்டினாரா என லோக்சபாவில் காங்., MP வேணுகோபால் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமித்ஷா, உடனே ராஜினாமா செய்துவிட்டு, போலி வழக்கில் விடுதலையாகும் வரை எந்த பதவியையும் ஏற்கவில்லை, எனக்கு யாரும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டாம் எனக் காட்டாமாக தெரிவித்தார்.
2023-24-ல் 6,599 கடத்தல் வழக்குகளில் 4,972 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பார்லிமென்ட்டில் கூறியுள்ளார். இது, 2022 – 23-ல் 4,343 கிலோ, 2021 – 2022 நிதியாண்டில் 2,172 கிலோவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் இந்தத் தகவல் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சட்டவிரோதமான கடத்தல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இதனை தடுக்க என்ன வழி?
இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
30 நாள்களுக்கு மேல் சிறையில் இருந்தால், பதவிநீக்கம் செய்யும் ‘<<17462799>>PM, CM பதவிபறிப்பு மசோதா<<>>’வுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தீவிரமாகியுள்ளது. இந்த சட்டம் குற்றம் செய்வதிலிருந்து அரசியல்வாதிகளை தடுக்க உதவும் என்கின்றனர் ஆதரிப்போர். ஆனால், குற்றம் செய்யாமல் (அ) பொய்வழக்கில் சிறைசெல்ல நேரும் அரசியல் தலைவர்களை, பதவியிழக்க செய்ய இது தவறாக பயன்படுத்தப்படும் என்கின்றனர் எதிர்ப்போர். உங்களின் கருத்து என்ன?
மதுரை தவெக மாநாட்டு அரங்கில் <<17463695>>100 அடி உயரக் கொடிக்கம்பம் சரிந்து விழுந்த விபத்து<<>> பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் வடு மறைவதற்குள் ராட்சத ஃபோக்கஸ் லைட்டுகள் சரிந்து விழுந்தது. இப்படி அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்த நிலையில், விஜய் மாநாட்டு அரங்கில் ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், சேதமடைந்த கொடிக்கம்பத்திற்கு மாற்றாக வேறு கொடிக்கம்பம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.